Friday, August 22, 2008

கோபமெல்லாம் வேகமாக

 செஞ் சீனம் ஜப்பான் கொரியா ரஷியா 
  ஜெர்மனி மேலும் சில நாடுகளே
  தஞ்சம் என்று கறுப்பினத்தை நாடி இன்று
  தங்கங்கள் குவிக்கவில்லை போட்டியிலே
  வஞ்சகர்கள் தம் நாட்டில் அவர்களையே
  வதை செய்து வாழ்வொழித்த நாட்டிற்கெல்லாம்
  கொஞ்சமல்ல தங்கங்கள் குவிப்ப தெல்லாம்
  குன்றாத மனம் கொண்ட கறுப்பினமே

  பசித் துன்பம் ஒழியாத கறுப்பர் நாட்டார்
  பாய்ந்து ஒடி தங்கங்கள் பெறுகையிலே
  வசிப்பதற்கு வழியின்றி வறுமைத் துன்பம்
  வாட்டையிலும் வெல்லுகின்ற அவரைப் பார்த்தால்
  கசியவில்லை கண்ணிரண்டும் கண்ணீரையே
  கார் மழையாய்ப் பொழிகின்றது அவ்வினத்தின்
  பசியதனைத் தீர்க்காத இறைவன் மீது
  பாய்கிறது கோபமெல்லாம் வேகமாக
  
  

1 மறுமொழிகள்:

Anonymous said...

ayyaa vanakkam..thangal aruvi thamil kaniniyil vaasippathil perumai kolkindren..