Tuesday, August 12, 2008

பழம்பாடல் புறநானூறு

ஆய் அண்டிரன் நாடி அழகு தமிழ்ப் புலவோர்கள்
  அணி அணியாய்ச் செல்கின்றார் பரிசில் பெற்றுய்ந்திடவே
  சேய் போல அவர் அணைத்துச் சிறப்பாக விருந்தளித்து
  செல்வோர் ஒவ்வொருவருக்கும் யானை ஒன்றைத் தருகின்றான்
  தாய் போல ஒரு புலவர் தமிழானைக் கேட்கின்றார்
  தங்கமே உன் காட்டுப் பெண் யானை ஒவ்வொன்றும்
  சூலுற்ற போதெல்லாம் பல குட்டி ஈனுமோ
  சொல்லி விடு எல்லோர்க்கும் யானையையே தருகின்றாய்

  உறையூர் ஏணிச்சேரி முட மோசியார்
  பாடப்பெற்ற மன்னன் ஆய் அண்டிரன்
   
  விளங்குமணிக் கொடும் பூண் ஆ அய்-நின்னாட்டு
  இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனுமோ
  நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு
  இன் முகம் கரவாது உவந்த நீ அளித்த
  அண்ணல் யானை எண்ணின்,கொங்கர்க்
  குடகடல் ஓட்டிய ஞான்றைத்
  தலைப் பெயர்த்திட்ட வேலினும் பலவே
   

0 மறுமொழிகள்: