Wednesday, August 6, 2008

குறட் கருத்து

 நல்லவரின் வீட்டுக்குள் துன்பம் வந்தால்
  நடக்கின்ற கதையதனை கொஞ்சம் கேட்போம்
  வல்லதுவாய்த் துன்பமது கருதிச் சென்றால்
  வதை படுமாம் துன்பம் அவர் வீட்டிற்குள்ளே
  நல்லதுவாய் வருவதெல்லாம் கருதுகின்ற
  நாயகரைத் துன்பம் அது என்ன செய்யும்
  அல்லல் பட்டு அது அழுமாம் அய்யோ என்று
  அழகாகச் சொல்லுகின்றார் வள்ளுவனார்

  குறள்
 இடும்பைக்கே இடும்பை படுப்பர் இடும்பைக்கே
 இடும்பை படாதவர்

0 மறுமொழிகள்: