Saturday, August 30, 2008

அறியாப் பேச்சு

 பல்லாண்டு காலமாய் ஒடுக்கப் பட்டோர்
  பலவிதமாய் வாழ்வின்றித் தடுக்கப்பட்டோர்
  கல்லாதாராய் அவரைக் கட்டி வைத்து
  கவலைகளில் அவர் தள்ளி வாழ்ந்திருந்த
  பொல்லாரைத் தீயவரை புறத்தில் தள்ளி
  பொறுப்பாக அவர் வாழ வழிகள் செய்து
  நல்லார்கள் மிகச் சிறப்பாய்த் தந்து நின்ற
  நலமான ஒதுக்கீடு உரியவராம்

  எல்லார்க்கும் போகிறதா என்று கேட்டால்
  இல்லை என்ற பதிலேதான் எங்கும் கேட்கும்
  வல்லார்கள் சாதியினை மாற்றித் தந்து
  வகை செய்வார் மற்றவரை ஏய்த்து நிற்பார்
  சொன்னேன் நான் பணம் கொண்டு இந்த விதம்
  சோடிப்பு வேலை செய்வோர்க்கு உதவி நிற்பார்
  மண்ணாள வந்தோரும் அரசு தன்னில்
  மணமாக பொறுப்பில் உள்ள வேலையாரும்

  சொன்ன விதம் புரியார்க்கு என்ன செய்வேன்
  சொல்லும் மனம் எந்தன் மனம் நல்ல மனம்
  கன்னலெனும் தமிழினிலே வள்ளுவனைக்
  கற்று நின்ற என் மனத்தை நானறிவேன்
  மின்னுகின்ற உண்மையினை விரும்பி நிற்கும்
  மென் மனத்தான் என்னை எந்தன் ஊரறியும்
  என்னைப் பற்றி அறியாதோர் பேசி நின்றால்
  என்ன செய்வேன் அவர் பேச்சு அறியாப் பேச்சு

1 மறுமொழிகள்:

said...

http://mayavarathaan.blogspot.com/2008/08/469.html