Wednesday, August 6, 2008

பழம் பாடல் கம்பன்

 பெண்கள் எல்லாம் அடிமையென்று கருதுகின்ற
  பேதைமையில் இருக்கின்றார் இன்னும் சிலர்
  கண் காது மூக்கு வைத்துக் கதைகள் சொல்லி
  கவிதைகளும் எழுதுகின்றார் பல பேர் இங்கு
  சொன்னாரா உண்மையினை இல்லை இல்லை
  சொன்னவர்கள் சொன்னாரே அதைச் சொன்னாரா
  கண்ணான கற்பு என்றும் கணவன் என்றால்
  கண் கண்ட தெய்வம் என்றும் சொல்லி வைத்தார்

  சீதையவள் பேசுகின்றாள் இராமனிடம் கம்பன்
  செப்புகின்ற செய்தியிதைச் சொல்ல மாட்டார்
  பேதையென்று பெண்ணினத்தை நினைப்பதுவே
  பெருமையெனக் கருதுகின்றாய் நாயகனே
  நீ மட்டும் இல்லை அங்கே வானுலகில்
  நிதம் உயிர்கள் தனைப் படைக்கும் பிரம்மாவோடு
  தேனுமையாள் பாகத்தான் சிவனும் நல்ல திருமாலும்
  தேர்வாரோ பெண்ணின் உள்ளம்

  வாகாக கேள்வி யொன்றை சீதை மூலம்
  வைக்கின்றான் கம்பனவன் பெண்களுக்காய்
  தோதாக இதை விடுத்து மற்றதெல்லாம்
  தொகுக்கின்றார் மேடைகளில் அறிஞர் என்பார்
  ஆகாகா கற்பு பெண்மை உண்மை என்று
  அடுக்கி நிற்பார் மேடைகளில் அந்தோ பாவம்
  சாகாராய் வாழுகின்ற இவரைக் கண்டு
  சத்தியமாய்த் தமிழன்னை சிரித்து நிற்பாள்

  கம்பன்
 பங்கயத்து ஒருவனும் விடையின் பாகனும்
 சங்கு கைத் தாங்கிய தரும மூர்த்தியும்
 அங்கையின் நெல்லி போல் அனைத்தும் நோக்கினும்
 மங்கையர் மன நிலை உணர வல்லரோ

0 மறுமொழிகள்: