Sunday, June 8, 2008

பழம் பாடல் புதுக்கவிதை

         சேரனது  பெருங்கோட்டைக்  கதவைச் சென்று
                     சேர்ந்துவிட்டேன் அவன் காணும்  ஆசையாலே
         ஆரமென  மாணிக்க  மாலை அதை  
                      அணிந்திருப்பான்  தனைக் காணும் வேட்கையாலே
         பேர்கிறது  என் நெஞ்சு  முன்னே  சென்று
                      பொருமி மீண்டும்  வருகிறது அலைகிறது
         ஊரினிலே   வறியவர்தம்   நாணம்  அவர்
                      உள்ளமதை  வருத்தி நிற்கும்  தன்மை  போலே


        வறுமையிலே  வாடி நிற்பார்  செல்வந்தர்  தம்
                     வாசலுக்கு உதவி கேட்கப் போயிடுவார்
         அறுபடும்  தம்  உள்ளத்து  நாணம்  தன்னால்
                      அங்கொன்றும் கேட்காமல் வெட்கி நிற்பார்
         தறி  படும்  அப்பாட்டைத்தான்  எந்தன்  உள்ள்ம்
                       தன் பாடாய்க் கொண்டிங்கேத் தவிக்கிறது
         அறிவீரோ  வ்றியவரும்  நானும்  ஒன்றாய்
                       ஆன கதை  இவ்வாறே   பெண்ணாள் சொன்னாள


                                      முத்தொள்ளாயிரம்

              ஆய்மணிப்  பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
               காணிய சென்று கதவடைந்தேன் - நாணிப்
               பெருஞ் செல்வர் இல்லத்து  ந்ல்கூர்ந்தார்ப் போல
               வருஞ் செல்லும்  பேரும்  என் நெஞ்சு

0 மறுமொழிகள்: