Thursday, June 5, 2008

பழம் பாடல் புதுக்கவிதை முத்தொள்ளாயிரம்

                  உங்கட்க்கொரு பொருள்  உடைமை ஆயிற்றென்றால
                               உடன்  அதனை  பத்திரத்தில்  பதிவு செய்வீர்
                  தென  களத்தான்  பாண்டியனின்  உடைமை   என்று
                               திசை  சூழ்ந்த  உலகத்தை  அவனின்  யானை
                  வன்களத்தில்  வீழ்ந்து படும்  எதிரி  மன்னர்
                               வாகான  மார்பகத்தில் தந்தம்  கொண்டு
                  எங்களது  பாண்டியனின்  உடைமை  இந்த
                               எழில்  உலகம்  என்றெழுதித்  தீர்க்கின்றது


                 சங்கதியைக்  கேட்டீரோ  பாண்டியனின்
                              சரித்திரத்தில் சரி பங்கு கொண்ட யானை
                தந்தமதை  எழுத்தாணியாகக்  கொண்டு
                             தார்  வேந்தர்  மார்புகளை  ஒலையாக்கி
                இங்கிவர்கள்  அனைவருமே  பாண்டியனின்
                             இலை வேலுக்கு  இலக்காகி  வீழ்ந்ததனால்
                பொங்கு கடல் உலகெங்கள்  சொந்தம்  என்று
                             பொறுப்பாகப்  பதிகிறதாம் பத்திரத்தை


                                               முத்தொள்ளாயிரம்

            மருப்பூசியாக  மறங்கனல்  வேல்  மன்னர்
            உருத்தகு மார்போலையாக-திருத்தக்க
           வையகம்  எல்லாம்  எமதென் றெழுதுமே
           மொய்யிலை  வேல்  மாறன்  களிறு
                             

0 மறுமொழிகள்: