Friday, June 6, 2008

பழம்பாடல் புதுக்கவிதை முத்தொளளாயிரம்

          பிறந்த  நாள்  கொண்டாட்டம்  சோழனுக்கு
                      பெறுகின்றார்  பரிசில்கள்  வரிசையாக
          சிறந்ததாம்  பசுவினது  கூட்டத்தோடு
                       செம்பொன்னும் அந்தணர்கள் பரிசாய்ப் பெற்றார்
          கறந்த பால்  வெண்மையெனக் கவிதை தரும்
                       கனித்  தமிழின்  புலவோரோ  யானை  பெற்றார்
          சிறந்த  இந்தப்  பரிசுகளின்  இடையில்  இந்தச்
                       சிலந்தி  மட்டும்  தன்  கூட்டை  இழந்ததென்ன


          வீடுகளை  வீதிகளைச் சுத்தம்  செய்தார்
                       வேந்தனவன் பிறந்த நாள்  என்பதாலே
           நாடெல்லாம்  சுத்தம்  செய்தார்   என்ற போது
                       நடப்பது தான்  இது  அதனைப் புலவ்ர்  கண்டார்
           கூடிழந்து  சிலந்தி  மட்டும்  பிறந்த  நாளில்
                       கொண்டாட்டம்  இல்லாமல்  இருத்தல்  கண்டார்
           வாடி  நின்ற  சிலந்தி  அதன்  வாட்டம்  கண்டு
                        வடித்திட்டார்  ஒரு  கவிதை அதனைக் காண்பீர்



                                       முத்தொள்ளாயிரம்

            அந்தணர்  ஆவொடு  பொன் பெற்றார்  நாவலர்
             மந்தரம் போல்  மாண்ட  களிறூர்ந்தார்-எந்தை
             இலங்கிலை வேல்  கிள்ளி  இரேவதி  நாள் என்னோ
             சிலம்பி தன்  கூடிழந்தவாறு

0 மறுமொழிகள்: