Friday, June 6, 2008

வாழ்கின்றாரா

             பணம்  படைத்தோர்  எல்லோரும்  வாழ்கின்றாரா
                      பதவிகளில்  இருப்பார்கள்     வாழ்கின்றாரா
             தினம்  தினமும்  செய்திகளில் முன்னே  நிற்கும்
                      திரு  நாட்டார்  சிற்ப்பாக  வாழ்கின்றாரா
             கணப் பொழுதும்  மற்றவரைச் சிந்திக்காத
                      கையூட்டுப் பேர் வழிகள்  வாழ்கின்றாரா
             குணமுடையார்  உலகுக்காய்  வாழ்வார் மட்டும்
                       கொற்றவராய்  வாழ்ந்திடுவார்  மறைந்த  பின்னும்
                      

0 மறுமொழிகள்: