Tuesday, June 3, 2008

நம்மாழ்வார்

                  ஆண்டவர்கள்  பெயரினிலே  சண்டையிட்டு
                             அழிகின்றார்  மானிடர்கள்  எங்கும் என்றும்
                  தூண்டுபவர்  எவரேனும்  அழிவதில்லை
                              தொண்டர்களே    அழிகின்றார்  அந்தோ  பாவம்
                  வேண்டுமட்டும்  பெரியவர்கள்  சொல்லிச் சென்றும்
                              வீணாக  அழிகின்றார் கண்டு  நொந்தோம்
                  ஆண்டவனை   நற்றமிழால்  அழகு  செய்த
                               ஆழ்வார்க்கு  ஆழ்வார் தம்  சொல்லைக் கேட்போம்

                   
                  அவரவர் தம்  அறிவினது  வழியதாக
                               அவரவர்க்காய்  தெய்வம்  அங்கே  அமைகிறது
                   அவரவர்க்காய்  அமைந்த  அந்தத்  தெய்வம்  ஏதும்
                                அன்பான  தெய்வம்தான்  குறைந்ததில்லை
                   அவரவர்தம்  விதி வழியே   தெய்வங்களும்
                                 அமைகிறது   வணங்குகின்றார்  புரிந்து கொள்வீர்
                   தவறின்றித்  தமிழினிலே  தந்து  நின்றார்
                                தமிழ் வேதம் அருளி நின்ற நம்மாழ்வார் தான்



                                                          பாசுரம்

               அவரவர்  தமதறிவறி  வகை வகை
               அவரவர் இறையவர்  என  அடி அணைவர்கள்
               அவரவர்  இறையவர்  குறைவிலர் இறையவர்
               அவரவர்  விதி  வழி  அடைய  நின்றாரே

1 மறுமொழிகள்:

said...

nallathu ariyathu !!!