Tuesday, June 3, 2008

நம்மாழ்வார் பாசுரம்

               யார்  வணங்கும்  ஆண்டவர்தான்  சிறந்தவரென்று
                      எப்போதும்  மனிதருக்குள்  சண்டை  உண்டு
               ஊர்  முழுக்க  இச்சண்டை மீண்டும்  மீண்டும்
                      ஒலிப்பதுண்டு மனிதர்களை  ஒழிப்பதுண்டு
               கார்  நிறத்து  மேனியனாம்  கண்ணனையே
                      காதலித்து  நின்றாலும்  ஆழ்வார்க் காழ்வார்
               சீர்  பெறும் நல்  வழியினையே  நந்தமக்காய்
                      செப்பி  வைத்தார்  நம்மாழ்வார்  நம்மாழ்வாரே தான்


               வாழுகின்ற  சூழலுக்கு  ஏற்றாற் போல
                       வடிவங்கள்  கண்டெவரும்  வணங்குகின்றார்
                சூழ்ந்து  எதையும்  வெல்லுகின்ற  விதி தான் இங்கே
                        சொல்கிறது  அவரவர்க்காம்  கடவுள் தன்னை
                ஆழ்ந்தவரும்  வணங்குகின்றார்  தவறேயில்லை
                         அக்கடவுள்  குறைந்ததில்லை  உயர்ந்ததுவே
                வாழ்ந்திடுவீர்  மானிடரே  இதை  உணர்ந்து
                          வையகத்தில்  கடவுளிலே  குறைகள்  இல்லை


                                                        பாசுரம்

             அவரவர்  தமதம  தறி வறி  வகை  வகை
             அவரவர்  இறையவர்  என  அடி  அணைவர்கள்
             அவரவர்  இறையவர்  குறைவிலர் இறையவர்
             அவரவர்  விதி  வழி   அடைய  நின்றாரே
                 

0 மறுமொழிகள்: