Wednesday, June 11, 2008

பழம்பாடல் புதுக்கவிதை

                    நீரால்  நிறைந்திருக்கும்  மாந்தை  மாநகரத்தில
                              நிழல்  போலே  இருக்கின்ற  அன்பால் நிறைந்திட்ட
                    ஊரார் இவரன்றி   நம்  குறையைத் தீர்த்து  விட
                              உறவென்று  யார்  உண்டு உணர்ந்தாயோ  தோழி நீ
                    யாராலே  இந்நோய்  எமக்கு  விளைந்ததுவோ
                              யார்  குதிரை  வேகத்திற் கிலக்கணமாய்  ஒடுவதோ
                    சீராக  அவரன்றி  யார்தான்  நம்  குறை  தீர்ப்பார்
                              சேரனன்றோ  இந்நோய்க்கு  ம்ருந்தாவான் என்   தோழி


                    ஊரார் தனை அழைத்து    உண்மை நிலை சொல்லிடுவோம்
                               பேராளன்  சேரனிடம்  பேசி  அவன்  தோள்  சேர
                    நீரேதான்  பொறுப்பு என்றும்  நீதி சொல்லி மன்னனையே
                               வாராதிருந்தால் எங்கள்  வடிவழகுப்  பெண்  அழிவாள
                    கார்  போலக் கருணை கொண்டு  காத்திடுக என வேண்ட
                                ஊராருக்கே  முடியும்  உயர்ந்தவரே  காத்திடுவார
                    வார் குழலாள்  காதலினை  வாழ வைக்கும்  பொறுப்பதனை
                                ஊராருக்களிக்கின்ற உயர்ந்த கவி  காண்பீரே


                                                         முத்தொள்ளாயிரம்

                மல்லல்  தீர்  மாந்தையார் மாக்கடுங்கோக் காயினும்
                சொல்லவே  வேண்டும்  நம் குறை   -     நல்ல
                திலகம்  கிடந்த  திரு நுதலாய்  அஃதன்றோ
                உலகம் கிடந்த  இயல்பு
                    

                     
                              
                              
                    

2 மறுமொழிகள்:

said...

தட்டச்சுப்பிழைகளைச் சற்ரு தவிர்த்தால் கவியின்பம் சிறக்கும்

said...

இயன்ற வரை தவிர்த்துள்ளேன் ஒன்
றிரண்டு இல்லாமல் கவனிப்பேன்
இனிமேல் அய்யா.
வாழ்க தமிழுடன்.நன்றி அய்யா.
தங்கள் நெல்லைக்கண்ணன்