Sunday, October 10, 2010

மரபில் பிழை

பிழைப்பதற்காய் எதனையுமே விட்டுத் தரும்
பேதைகளே வாழ்வதுவாய் நினைக்கின்றார் காண்
குழைந்து அவர் பணம் செய்தோர் முன்னே மிகக்
குறுகி நிற்கும் காட்சியினைக் காணும் போது
தொலைந்து போகும் நல்லவரின் மனது அங்கே
துடித்து நிற்பார் பெரியவர்கள் நொந்து நொந்து
பிழையாகப் பிறந்து விட்டார் தமிழர் நாட்டில்
பெரும் பிழைதான் என்ன செய்ய மரபில் பிழை

0 மறுமொழிகள்: