Showing posts with label வா மீத முலை எறி நூல். Show all posts
Showing posts with label வா மீத முலை எறி நூல். Show all posts

Saturday, July 4, 2009

வா மீத முலை நூலில் இருந்து காதல்

உன்னைத்
தென்றல் என்றது
புகழ்ச்சியல்ல

நீயாகத்தான்
தழுவினாய்


உன்னை
மலர்கள்
என்றதும் கூட
புகழ்ச்சியல்ல

நீயாகத்தான்
மலர்ந்தாய்


உன்னைக்
கவிதை
என்றது கூட
புகழ்ச்சியல்ல

நீயாகத்தான்
தோன்றினாய்


உன்னைத் தேடவிட்ட
காரணத்தால்
தேன்
என்கின்றேன்


உன்னைத்
தீண்ட
முடியாக்
காரணத்தால்

தீ
என்கின்றேன்

வா மீத முலை நூலில் இருந்து நடிகை

கவர்ச்சி வேண்டும்
காதல் வேண்டும்

கட்டிப் பிடித்து
ஆடவும் வேண்டும்

மைதுன உணர்வில்
மகிழ்ந்து விட்டு

நடிகையின்
கற்பில்

விமர்சனம்
வேறு

Friday, July 3, 2009

வா மீத முலை எறி நூலில் இருந்து அவ்வையார்

கல்யாணம்
வேண்டாம்

என்றால்

பேரிளம்
பெண்ணாக்கிய
பிள்ளையார்

ஆகவே
வழியில்லை

என்றால்
ஆக்க மாட்டாரோ?

அகவல்
வெண்பா

பாடத்
தெரியுமா?

வா மீத முலை எறி நூலில் இருந்து

தங்கு தடையின்றி
தமிழே வாழ்க

தமிழினம்
எதிலும்

தலைமை
தாங்குக

தலைவலி
என்றால்

அனாஸின்
போடுக

வா மீத முலை எறி நூலில் இருந்து

தமிழைக்
காக்கும்

அறிஞர்
விருந்தில்

சென்னா
பட்டூரா

பாலக்
பன்னீர்

வா மீத முலை எறி நூலில் இருந்து ஆங்கிலம்

ஆங்கிலம்
ஒர்

அற்புதம்
செய்யும்

குடிக்கும்
இடமும்
பார் தான்

நீதித்
துறையும்
பார்தான்

வா மீத முலை எறி நூலில் இருந்து

அழுகையிலும்
அவ
அழகு
யம்மாடி

ராமசாமி
பொணத்த

இன்னும்
தூக்கல

கூடு
விட்டுக்
கூடு
பாய

நாம
என்ன
சாமியாராவேய்

வா மீத முலை எறி நூலில் இருந்து இராமன்

வேள்விப்
பொருளில்
பிறந்த
இராமன்

தேர்தல்
தோறும்

பிறப்பது
எப்படி?

வா மீத முலை எறி நூலில் இருந்து விநாயகர்

விநாயகர்
ஊர்வலம்

முடிந்த
ஜோரில்

விநாயகர்
ஒயின்ஸில்

வியாபாரம்
கன ஜோர்

வா மீத முலை எறி நூலில் இருந்து பிள்ளையார்

பிள்ளையாரிடம்
ஒடிப்போனேன்

அவசரமாய்
அபயம் கேட்க

சொனா
பானா

உபயத்திலேதான்

பிள்ளையார்
இருந்தார்

வெளிச்சத்தில்