உன்னைத்
தென்றல் என்றது
புகழ்ச்சியல்ல
நீயாகத்தான்
தழுவினாய்
உன்னை
மலர்கள்
என்றதும் கூட
புகழ்ச்சியல்ல
நீயாகத்தான்
மலர்ந்தாய்
உன்னைக்
கவிதை
என்றது கூட
புகழ்ச்சியல்ல
நீயாகத்தான்
தோன்றினாய்
உன்னைத் தேடவிட்ட
காரணத்தால்
தேன்
என்கின்றேன்
உன்னைத்
தீண்ட
முடியாக்
காரணத்தால்
தீ
என்கின்றேன்
Saturday, July 4, 2009
வா மீத முலை நூலில் இருந்து காதல்
வா மீத முலை நூலில் இருந்து நடிகை
கவர்ச்சி வேண்டும்
காதல் வேண்டும்
கட்டிப் பிடித்து
ஆடவும் வேண்டும்
மைதுன உணர்வில்
மகிழ்ந்து விட்டு
நடிகையின்
கற்பில்
விமர்சனம்
வேறு
Friday, July 3, 2009
வா மீத முலை எறி நூலில் இருந்து அவ்வையார்
கல்யாணம்
வேண்டாம்
என்றால்
பேரிளம்
பெண்ணாக்கிய
பிள்ளையார்
ஆகவே
வழியில்லை
என்றால்
ஆக்க மாட்டாரோ?
அகவல்
வெண்பா
பாடத்
தெரியுமா?
வா மீத முலை எறி நூலில் இருந்து
தங்கு தடையின்றி
தமிழே வாழ்க
தமிழினம்
எதிலும்
தலைமை
தாங்குக
தலைவலி
என்றால்
அனாஸின்
போடுக
வா மீத முலை எறி நூலில் இருந்து ஆங்கிலம்
ஆங்கிலம்
ஒர்
அற்புதம்
செய்யும்
குடிக்கும்
இடமும்
பார் தான்
நீதித்
துறையும்
பார்தான்
வா மீத முலை எறி நூலில் இருந்து
அழுகையிலும்
அவ
அழகு
யம்மாடி
ராமசாமி
பொணத்த
இன்னும்
தூக்கல
கூடு
விட்டுக்
கூடு
பாய
நாம
என்ன
சாமியாராவேய்
வா மீத முலை எறி நூலில் இருந்து இராமன்
வேள்விப்
பொருளில்
பிறந்த
இராமன்
தேர்தல்
தோறும்
பிறப்பது
எப்படி?
வா மீத முலை எறி நூலில் இருந்து விநாயகர்
விநாயகர்
ஊர்வலம்
முடிந்த
ஜோரில்
விநாயகர்
ஒயின்ஸில்
வியாபாரம்
கன ஜோர்
வா மீத முலை எறி நூலில் இருந்து பிள்ளையார்
பிள்ளையாரிடம்
ஒடிப்போனேன்
அவசரமாய்
அபயம் கேட்க
சொனா
பானா
உபயத்திலேதான்
பிள்ளையார்
இருந்தார்
வெளிச்சத்தில்