Thursday, July 14, 2016

என்னவே சுப்பையா பிள்ளை கூப்பிட்டாத்தாம் அண்ணாச்சி நெனவு வரும் என்னவே. பன்னம்பாறைக்காரி எப்படி இருக்கா.

ஆமா பன்னம்பாரைக் காரில்லாம் நீங்க குடுக்கிற செல்லத்துல குளிர் விட்டுப் பொயிருக்கா. எல்லாப்பொம்பளகளும் அப்படித்தான் ஊருக்குள்ள இருக்காளுவ

எல எங்க அம்மே போய்ச் சேர்ந்ததுக்கப்புறம்  வத்தக்குழம்புக்கு அலந்த போதெல்லாம் அவ எங்கம்மையாயில்லாடா வத்தக் குழம்பு குடுத்து விடுவா.
பொம்பளப்புள்ளகள புரிஞ்சுகிட்டாத்தான் தொல்லையில்ல.எவம் புரிஞ்சுக்கிடுதீய. அண்ணாச்சிதான் காரணம்ன்னு ஊரு கூடித் தீர்மானம் போடுங்களேண்டே.


ஏய் நெல்லையப்ப பிள்ளை  என்ன படிக்கீரு.                                                                      

அவரு எங்கே படிச்சாரு. காலேஜ்ல இருந்து ஒடி வந்திட்டாரு. அங்கனயும் ஒங்க பேரத்தான் ஒங்க கொழுந்தியா பயன் படுத்துதா. அவோ பெரிய வீட்டுப் பெரியப்பா மாரி பெரிய ஆளா வந்திருவாம். அவோளும் பத்தாங்கிளாசுக்குப் பொறவு காலேஜ் போயிட்டு ஒடி வந்த ஆளுதானங்கா.

வெள்ங்கிச்சு போ. எய்யா அப்பா கூடக் கடையப் பாத்துக்கிடுதியோ.

எங்க அண்ணாச்சி போத்தீஸ்ல விதம் விதமா பேண்டும் சட்டையும் அவங்க அம்மாக்கர்ரி எடுத்துக் குடுக்கா. அவாள் மைனரா அலையுதாரு.

அதாம்வே நானும் கூப்பிட்டு விட்டேன்.

நெல்லையப்பா அந்த சேட் பிள்ளை பின்னால அலயுதீயோ. ஒண்ணும் தப்பில்லை. அவ்வளவு அழகா இருந்தா போகத்தான் தோணும்.ஆனா அவ எம்.சி.ஏ. படிக்கான்னு தெரியுமாவே. அவனுகளுக்கு ஒண்ணுன்னா ராஜஸ்தான் அரசாங்கம் நம்ம அரசாங்கத்துகு தகவல் தரும். கொன்னுருவானுவ.நீரும் பெரிய படிப்பெல்லாம் படிச்சு அந்தப் பிள்ளைய காப்பாத்தற அளவு சம்பாதிச்சாக் கூட பெரியப்பா பேசி ஏதாவது பண்ணிருவேன். கொஞ்சம் யோசனை பண்ணிப் பாரும். ஒரு நேரம் காலையில் டிபன் எவ்வளவு செலவாகும் தெரியுமாவே .மூணு நேரம் சாப்பாடு. மருந்து மாத்திரை சினிமா டிவி   சேல துணிமணின்னுன்னு செல வு வேற.அதுக்கெல்லாம் வழி  இருக்கா .ஒங்க அம்மை வேற அவங்க அண்ணன் மக சிவகாமிதான் எனக்கு மருமகன்னு ஊரு பூராவும் சொல்லிக் கிட்டு அலையுதா? காதல் பண்ணக் கூடாதுன்னு சொல்லல.அவளும் ஒன்னய விரும்பினாத்தானடே காதல். நீ வெள்ளையும்சொள்ளையுமா பேண்டும் சர்ட்டும் போட்டா வந்திருவாளாடே. போயி ஏதாவது தொழில் பாரு. இல்ல ஊரில வயக்காடு இருக்குல்லா அதைக் கவனி. எல்லாப் பயலுவளையும் காப்பாத்துத தொழில்ங்கார் வள்ளுவர். அதை விட்டுட்டு இப்படி அலையக் கூடாது சரியாய்யா. அவனுக கோடீஸ்வர்ன்லா அய்யா.அவ முறைபையன் எத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்கர்ரன் தெரியுமா. அவனும் அவளைப் போலவே செகப்புரெட்டா இருப்பாம்ல்லா. ஏம் மேல் ஒமக்குத்து கோபம் தான் வரும். ஆனா இந்தச் சேட்டைய நிறுத்தலைன்னு வையும் போலீஸ்ல்லாவே வரும்..
நல்ல புள்ளைல்லா வீட்டுல போயி யொசிச்சுப் பாரும் ஒமக்குப் புரியும்.ங்க அம்மைக்யும் ஒங்க மாமனும் செந்து ஒண்ணக் கொல்லக் கூட யோசிக்க மாட்டங்க. அவ ஒம் மொறப் போண்ணு அவளே கடுமையான் பிள்லைல்லாவே,

யாரு பின்னாலேயும் அலைஞ்சா கோட்டிக் காரப் பயன்னு சொல்லிரு வானுவல்லா நம்ம ஊருல.போயிட்டு வாங்க  . நாம் பாத்துக்கிடுதம் அண்ணாச்சி. ஒங்க கொழுந்தியா போன்ல கூப்பிட்டாலும் கூப்பிடுவா. அவளுக்கும் புரியுத மாரி சொல்லுங்க அண்ணாச்சி.

சரி வே


யத்தான்.

யாரு வத்தக் குழம்புக்காரியா. எங்க அம்மியில்லா. சொல்லுளா. இனிமே இந்தப் பய எங்கேயும் வர மாட்டாம் அந்த சேட் கிட்ட உறுதியாச் சொல்லுங்க.என்கிட்ட அவம் சொல்லிட்டாம். பெரியப்பாவெல்லாரும் ஏன் அய்யா அய்யான்னு சொல்லி விழுந்து கும்பிடுதாங்கன்னு இன்னிக்குத்தம் தெரிஞ்சுகிட்டேன்ங்கான். நல்லாப் புரியற மாரி கோபமே இல்லாம் பெரியப்பா சொன்ன ப்பொறவுதான்  நான் எப்படி அசிங்கமா நடந்துக்கிட்டிருக்கேம்ன்னு புரிஞ்சுதும்மான்னு சொல்லிட்டான்.   ஒங்க மாப்பிள்ளய கடையை ஒழுங்கா நடத்தச் சொல்லுங்க.

நெனச்சேம்லா. சொல்லிட்டே.சொல்லிருதேம்ம்மா.நல்லா இரி

0 மறுமொழிகள்: