Showing posts with label கண்ணதாசன் கட்டுரைகள். Show all posts
Showing posts with label கண்ணதாசன் கட்டுரைகள். Show all posts

Thursday, March 29, 2012

கண்ணதாசன் கட்டுரைகள்

இதய கமலம் என்ற படத்தில் காதல் வயப்பட்ட பெண்ணொருத்தி பாடும் பாடல் ஒன்று.கவியரசர் கவியரசர் தான் என்று பறை சாற்றும் பாடல்.

தாயின் கருப்பையிலிருந்து மண்ணிற்கு வருகின்ற குழந்தை கண்
திறந்ததா என்று அனைவரும் காத்திருப்பார்கள். குழந்தை கண் திறந்ததை அம்மாதான் முதன் முதலில் பார்ப்பாள். பின்னர் ஒவ்வொருவராகப் பார்த்து மகிழ்வார்கள். பிறகு குழந்தை முகம் பார்க்கிறது என்று பெருமைப் படுவார்கள். பிறகு அப்பாவை குழந்தைக்கு அடையாளம் தெரிகின்றது மாமாவை அடையாளம் தெரிந்து கொள்கின்றதென்றெல்லாம் மகிழ்வார்கள். அந்தப் பெண் குழந்தையும் அப்படி எல்லா மகிழ்ச்சியையும் தாய்க்கும் தந்தைக்கும் உறவினர்களுக்கும் தந்தவள் தான்.

அந்தக் கண்களால் உலகைப் பார்த்து இயற்கையைப் பார்த்து மகிழ்ந்தவள்தான் கிளியை மைனாவை குயிலை மயிலை சிட்டுக் குருவியை ஆடு மாடு மான் என்று பார்த்து மகிழ்ந்தவள்தான்.

கண்ணான கல்வியைக் கற்றுத் தேறியதும் அந்தக் கண்களினால்
தான். அவள் பாட்டி அவள் கண்களின் அழகுக்கே திருஷ்டி சுற்றியது பலமுறை. இப்படியெல்லாம் உறவை உலகை கல்வியைக் காட்டித் தந்த கண்ணை அவள் கண்ணேயில்லை என்கின்றாள் . ஆமாம் அவள் மனம் கவர்ந்தவனைக் காண வாய்ப்பில்லாமல் போன கண்களையெல்லாம் கண்களே யில்லை என்கின்றாள்.

ஆமாம் உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
என்று.

Tuesday, March 27, 2012

கண்ணதாசன் திரைப் படப் பாடல்கள்



தந்தையைக் காண முடியாமல் தவிக்கின்ற குழந்தை ஒன்று அதனை வளர்க்கின்ர மாமன் அதற்கு ஆறுதல் சொல்லிப் பாடுகின்றான் பார்த்தால் பசி தீரும் என்ற படம்.

பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை
இறைவனை நம்பி வந்தாயோ

என்று கேட்கின்றார் கவியரசர்

ஆமாம் உனக்கு ஒரு தந்தை உண்டு மகனே. ஆனால் உன் தந்தைக்கும் ஒரு தந்தை உண்டு .அவர் தான் இறைவன் என்கின்றார்.

அடுத்த கேள்வி மிக மிக ஆழமான கேள்வி. ஆமாம் உனக்குத் தெரிய வாய்ப்பில்லை மகனே அந்த தந்தையாக உருவெடுத்த அந்த ஒருவனையா நம்பி நீ வந்துள்ளாய். இல்லை இல்லை அவனுக்கும் தந்தையான இறைவனை நம்பியல்லவா வந்துள்ளாய் என்கின்றார். ஏனெனில் உன் தந்தையையும் இயக்குவது அவனல்லவா என்கின்றார்.

உன் தந்தை உன் தாயை மறந்திருக்கக் கூடும் உன் தந்தை உனக்கு தந்தையென்று ஊரார் அறியச் சொல்லாமலிருக்கக் கூடும். ஆனால் இறைவனாகிய தந்தையோ நீ அழைக்க வேண்டும் என்று காத்திருக்க மாட்டான் அவனாகவே வந்து அவனது கடமைகளைச் சரியாகச் செய்வான்.

தாயாரைத் தந்தை மறந்தாலும்
தந்தை தானென்று சொல்லாத போதும்
ஏனென்று கேட்காமல் வருவான் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்

அடுத்துத் தான் கவியரசரின் சிந்தனையின் தெளிவும் உயர்வும் வந்து விழும் வரிகளாக.

கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கின்ற பணக்காரர்களுக்கு எல்லாம் சொந்தமாகக் காட்சியளிக்கும் என்கின்றார்.

செல்வமற்ற ஏழைகளுக்கு மிகப் பெரிய செல்வமாக இறைவன் அளித்த உள்ளங்கள் சொந்தமாக இருக்கும் என்கின்றார். அதனால்தான் இறைவன் என்ன செய்வானாம் கள்ளமற்ற உள்ளங்கள் வாழும் இல்லாதவரின் இல்லங்கள் தேடி வருவானாம். அவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் என்கின்றார்.

உள்ளோர்க்குச் செல்வங்கள் சொந்தம் அது
இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லாத இடம் தேடி வருவான் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
கவியரசரின் வரி வடிவங்கள் இறைவன் அவருக்கு அளித்த கொடை.

கண்ணதாசன் திரைப் படப் பாடல்கள்

தந்தையைக் காண முடியாமல் தவிக்கின்ற குழந்தை ஒன்று அதனை வளர்க்கின்ர மாமன் அதற்கு ஆறுதல் சொல்லிப் பாடுகின்றான் பார்த்தால் பசி தீரும் என்ற படம்.

பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை
இறைவனை நம்பி வந்தாயோ

என்று கேட்கின்றார் கவியரசர்

ஆமாம் உனக்கு ஒரு தந்தை உண்டு மகனே. ஆனால் உன் தந்தைக்கும் ஒரு தந்தை உண்டு .அவர் தான் இறைவன் என்கின்றார்.

அடுத்த கேள்வி மிக மிக ஆழமான கேள்வி. ஆமாம் உனக்குத் தெரிய வாய்ப்பில்லை மகனே அந்த தந்தையாக உருவெடுத்த அந்த ஒருவனையா நம்பி நீ வந்துள்ளாய். இல்லை இல்லை அவனுக்கும் தந்தையான இறைவனை நம்பியல்லவா வந்துள்ளாய் என்கின்றார். ஏனெனில் உன் தந்தையையும் இயக்குவது அவனல்லவா என்கின்றார்.

உன் தந்தை உன் தாயை மறந்திருக்கக் கூடும் உன் தந்தை உனக்கு தந்தையென்று ஊரார் அறியச் சொல்லாமலிருக்கக் கூடும். ஆனால் இறைவனாகிய தந்தையோ நீ அழைக்க வேண்டும் என்று காத்திருக்க மாட்டான் அவனாகவே வந்து அவனது கடமைகளைச் சரியாகச் செய்வான்.

தாயாரைத் தந்தை மறந்தாலும்
தந்தை தானென்று சொல்லாத போதும்
ஏனென்று கேட்காமல் வருவான் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்

அடுத்துத் தான் கவியரசரின் சிந்தனையின் தெளிவும் உயர்வும் வந்து விழும் வரிகளாக.

கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கின்ற பணக்காரர்களுக்கு எல்லாம் சொந்தமாகக் காட்சியளிக்கும் என்கின்றார்.

செல்வமற்ற ஏழைகளுக்கு மிகப் பெரிய செல்வமாக இறைவன் அளித்த உள்ளங்கள் சொந்தமாக இருக்கும் என்கின்றார். அதனால்தான் இறைவன் என்ன செய்வானாம் கள்ளமற்ற உள்ளங்கள் வாழும் இல்லாதவரின் இல்லங்கள் தேடி வருவானாம். அவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் என்கின்றார்.

உள்ளோர்க்குச் செல்வங்கள் சொந்தம் அது
இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லாத இடம் தேடி வருவான் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
கவியரசரின் வரி வடிவங்கள் இறைவன் அவருக்கு அளித்த கொடை.

Tuesday, March 13, 2012

கண்ணதாசனின் திரைப் படப் பாடல்கள்

சாதி என்றும் மதங்கள் என்று இன்றும் பிரிந்து அழியும் மனித குலத்திற்கு ஒரு மகத்தான செய்தியினைச் சொல்லுகின்றார் கண்ணதாசன்.கர்ணன் தாய் தந்தை யாரென்று அறியாதவன்.அதே அவன் வாழ்க்கையில் அவனுக்குப் பல இடங்களிலே அவமானங்களைத் தருகின்றது.அவனுக்குப் பெண் தந்த மன்னன் அவன் பிறப்பு குறித்து அவமானப் படுத்துகின்றான். கர்ணனின் மனைவி அவனைத் தேற்றுகின்றாள்.அதற்கான பாடல் கே.வி.மகாதேவனின் அருமையான இசையில்.

இது கண்ணதாசன் அவர்களுக்கு மட்டுமே இறைவன் அருளிச் செய்தது. பாடலில் மூழ்குங்கள்.

எல்லா உயிரினங்களுக்கும் கண்தான் வாழ்க்கை.
கண்ணதாசன் கேட்கின்றார்.

கண்ணுக்குக் குலமேது என்று என்ன கேள்வி.இன்று உலகம் முழுவதும் ஒருவர் கண் இன்னொருவருக்குப் பொருத்தப் படுகின்றது.
அங்கே சாதி உணர்வுகள் இல்லை. மதங்கள் பார்க்கப் படுவதில்லை.
தன் கணவனிடம் அவன் சமூகத்தின் கண் என்கின்றாள். ஆமாம் அவனுக்குக் கண் இருப்பதனாலே தான்கொடுத்துக்கொண்டேயிருக்கின்றாண்..

அடுத்த கேள்வி கருணைக்கு இனமேது எங்கே பதில் சொல்லிப் பருங்கள்.உயிர்களிடத்தில் அன்பு கொள்கின்ற பெரு மனமாம் கருணை என்ன இனத்தைச் சார்ந்தது.

விண்ணுக்குள் பிரிவேது விளக்குக்கு இருளேது என்கின்றார்.விண்ணுக்குள் விஞ்ஞான பிரிவுகள் சொல்ல முயலலாமே ஒழிய ஏது பிரிவு. அடுத்த கேள்வி விளக்குக்கு இருளேது. எத்தனை சிந்தனைத் திறன் கொண்ட கேள்வி இது.

பாலினில் இருந்தே நெய் பிறக்கும் கண்ணா பரம்பொருள் கண்டே உயிர் பிறக்கும் வீரத்தில் இருந்தே குலம் பிறக்கும் அதில் மேலென்றும் கீழென்றும் எங்கிருக்கும். ஒருவனை அந்தக் காலத்தில் சத்திரியன் என்று அழைப்பதே அவன் வீரத்தை வைத்தே. அதனால்தான் பரசுராமரே அவனை சத்திரியன் என்று உணர்கின்றார். அவனிடமும் கேட்டதன் வாயிலாக அவனுக்கு ஒரு ஆறுதலும் தருகின்றார். சாமர்த்தியமாக வேறு யாரையோ புகழுவதற்காக கண்ணதாசனின் திரைப்
படப் பாடல்களை யாராவது இழிவு படுத்த நினைத்தால் அவர்கள் என்னவென்று அழைப்பது.

Monday, March 12, 2012

கண்ணதாசனின் திரைப் படப் பாடல்கள்

கதிர் வெடித்துப் பிழம்பு விழ
கடல் குதித்துச் சூடாற்ற
முதுமை மிகு நிலப் பிறப்பின்
முதற் பிறப்புத் தோன்றி விட
நதி வருமுன் மணல் தரு முன்
நலம் வளர்த்த தமிழணங்கே
பதி மதுரைப் பெருவெளியில்
பாண்டியர் கை பார்த்தவளே


நின்னை யான் வணங்குவதும்
நீ என்னை வாழ்த்துவதும்
அன்னை மகற்கிடையே
அழகில்லை என்பதனால்
உன்னை வளர்த்து வரும்
ஓண் புகழ் சேர் தண் புலவர்
தன்னை வணங்குகின்றேன்
தமிழ்ப் புலவர் வாழியரோ


தனைப் புகழ் தன்னிடத்தோர் சொல்லில்லாத
தமிழே என் தாயே நின் பாதம் போற்றி
நினைப்பில் எழும் அத்தனையும் வடிவம் இன்றி
நிழலாகத் தோன்றிடினும் சிறிய நெஞ்சின்
நினைப்பினுக்கு மதிப்பீந்து வாழ்த்தாய் உன்
நிழல் கண்ட நானும் உன்னை வணங்குகின்றேன்
என்று கவியரங்கங்களில் அன்னை தமிழை அழகுறப் போற்றிய கவிஞர்


திருவிளையாடல் திரைப் படத்தில் தமிழாம் தாயை உயர்த்துகின்ற் பாங்கு அவருக்கே உரியது. ஆமாம்.

வட நாட்டுப் பாடகர் ஹேமநாதனை எதிர்த்துப் பாட பாணபத்திரருக்கு பாண்டியன் உத்தரவிட பாணபத்திரர் சொக்கநாதப் பெருமான் முன்னர் நின்று இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை என்று பாடும் பாடலில் கவிஞர் தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்கில்லையோ அன்னை தமிழுக்குப் பழி நேர்ந்தால் உனக்கில்லையோ என்று ஒரு கேள்வியை முன் வைத்து எம் பெருமான் சிவனுக்கே தாய் தமிழ் என்று பெருமைப் படுத்துவார்.

அதே திரைப் படத்தில் அவ்வை தமிழ்க் கடவுள் முருகனிடம் ஆறுவது சினம் என்று சொல்லி விட்டு கூறுவது தமிழ் என்றும் சொல்லுவாள் மிகவும் உச்சமாக அந்தப் பாடலில் இறுதியில் உன் தத்துவம் தவறென்று சொல்லிட அவ்வையின் தமிழுக்கு உரிமையுண்டு என்பாள்
அவ்வையின் வாயிலாக கவிஞர் தமிழ்த்தாய்க்கு தரும் பெருமை இது