Showing posts with label எங்கள் ஊர். Show all posts
Showing posts with label எங்கள் ஊர். Show all posts

Sunday, September 6, 2009

எங்கள் ஊர்

இன்னும்
எங்கள்
ஊர்
கொஞ்சம்
பத்திரமாகத்
தான்
இருக்கிறது

காலையில்
ஒரு
குயில்
எங்கிருந்தோ
கூவுகிறது

என்
வீட்டு
நந்தியாவட்டையிலும்
பவளமல்லி
மரத்திலும்
சிட்டுக் குருவிகள்
கொஞ்சிக்
கொண்டிருக்கின்றன

அதிகாலை
பால் மணிச்
சத்தம்
கேட்டுக்
கொண்டுதான்
இருக்கின்றது

புதிய
மனிதர்களையும்
போலீஸ்காரர்களையும்
பார்த்துத்
தெரு
நாய்கள்
குலைத்துக்
கொண்டுதான்
இருக்கின்றன

ஒற்றை
ஆட்டுக் கிடா
பத்துப்
பெண்
ஆடுகளைத்
துரத்திக்
கொண்டுதான்
இருக்கிறது

தெருப்
பெண்களுக்கு
அருள்
பாலிப்பதற்கென்றே
பசுக்கள்
காலையிலேயே
தெருவிற்கு
வந்து
விடுகின்றன

பாலாக்கீரை
அரைக்கீரை
பொன்னாங்கண்ணிக்கீரை
பாட்டிகளின்
குரல்
கேட்டுக்
கொண்டுதான் இருக்கின்றது

கரிசக்குளம்
கீரைத்தண்டு
கணபதி
விற்றுக்
கொண்டுதான்
இருக்கிறார்

ஆனையும்
திருமஞ்சனக்
குடமும்
அம்பாளுக்குப்
போய்க்
கொண்டு
தானிருக்கிறது

செண்பகப் பூ
விற்ற
தாத்தாவுக்கு
வாரிசுகள்
இல்லை
போல

நயினார்
குளத்திற்கு
வெளி
நாட்டுப்
பறவைகள்
வந்து
கொண்டு
தானிருக்கின்றன

அதிகச்
சிலைகள்
இல்லாததனால்
எங்கள்
ஊர்
கொஞ்சம்
அழகாகத்
தான்
இருக்கிறது