Showing posts with label தியாகராஜ பாகவதர். Show all posts
Showing posts with label தியாகராஜ பாகவதர். Show all posts

Saturday, February 7, 2009

தியாகராஜ பாகவதர்

வேற்றுமொழிப் பாடலினைப் பாட மாட்டேன்
வேண்டு மட்டும் தமிழிசையே பாடி நிற்பேன்
கூற்றுவன் போல் வறுமை எனைக் கொன்ற போதும்
கூடி நின்றார் எனை விட்டுச் சென்ற போதும்
ஏற்ற மொழி எந்தன்மொழி இறைவன் மொழி
என் மொழியாம் தமிழிலேயே பாடி நிற்பேன்
ஆற்றல் மிக்க தியாகராஜ பாகவதர்
அவரையும் நாம் வறுமையிலே விட்டு விட்டோம்