Showing posts with label பாவைப் பாடல்கள். Show all posts
Showing posts with label பாவைப் பாடல்கள். Show all posts

Wednesday, December 29, 2010

சிவனும் திருமாலும்

மார்கழி மாதம் ஆண்டாளும் மணிவாசகரும் தந்து நின்ற
சீர் நிறைப் பாவைப் பாடல்களை செவியில் நிறையச் செய்வதற்காய்
கார்முகில் கண்ணன் சிவனார் தம் கனிவை அருளைப் பெறுவதற்கு
ஊரினில் உள்ளோர் விடவில்லை ஒருவருக் கொருவர் எதிர்ப் பாட்டு
ஆரிதைக் கேட்பது தெருத் தோறும ஆறேழாகக் கோயில்களில்
சீரின்றிப் பாடல்கள் ஒலி பரப்பி செவியைக் கிழித்தே ஒழிக்கின்றார்
வார்முலை உமையின் சிவனாரும் வ்ளம் கொள் திருவும் திருமாலும்
ஆரிங்கு வருவார் வர மாட்டார் அகப் பட்டது நாம் மட்டு மிங்கே