விஷம க்காரக் கண்ணன் பாடப் பாட
விரும்பி நிற்கும் அவையோரும் ஆடிநிற்பர்
வசமான தமிழாலே வழங்கும் இசை
வானுலகம் வென்று மேலும் புகழைச் சேர்க்கும்
திசையெல்லாம் இசை பரப்பிவென்று நிற்பார்
தீந் தமிழால் மென் மேலும் பாடி இவர்
அசை யாத மனத்தை யுமே அசைய வைக்கும்
அன்னை அருணா சாய்ராம் வாழ்க வாழ்க
Showing posts with label அருணா சாயிராம். Show all posts
Showing posts with label அருணா சாயிராம். Show all posts
Monday, February 21, 2011
அருணா சாய்ராம்
Friday, February 4, 2011
அருணா சாய்ராம் மதுரை சோமு
அனுபவித்துப் பாடுவதில் அருணா சாய்ராம்
அவருக்கிணை அவரே தான் போட்டியில்லை
தனுப் பிடித்து நிற்கின்ற இராமன் கூட
தனை மறப்பான் சீதையினை மறந்து நிற்பான்
வினை யதனால் வீழ்ந்து விட்ட இராவணனும்
வீணை கொண்டு அவரோடு இசைத்து நிற்பான்
தனை மறந்து என்ன கவி பாடி நிற்க
தமிழ்ச் சோமு உள்ளிருந்து வாழ்த்தி நிற்பார்
Subscribe to:
Posts (Atom)