Showing posts with label நாடும் அரசியலும். Show all posts
Showing posts with label நாடும் அரசியலும். Show all posts

Thursday, January 26, 2012

வந்தேமாதரம்

இயக்கங்கள் அனைத்திலும் தீயவர்கள்
இருக்கின்றார் மிக்ப் பெரும் பொறுப்பிலே காண்
தயக்கமே யில்லாமல் தலைவர்களும்
தழுவியே அவர்களோ டுலவுகின்றார்
மயக்கம் தெளிந்தாலும் நமது மக்கள்
மாற்றின்றி இவரையே மாற்றுகின்றார்
வழக்கம் போல் குடி மக்கள் தலைவர் கூண்டில்
வந்தே மாதரம் கூறுகின்றார்

Friday, January 6, 2012

புரியவில்லை

புரியவில்லை

சிதம்பரத்திற்கெதிராக இத்தனை வேகம் காட்டும் சுப்ரமணியசாமி
மாறன் சகோத்ரர்களைப் பற்றி பேசாத மர்மம் என்ன.

புதுச்சேரியில் புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட தமிழர் சிதம்பரம் கடலூர் பகுதியைப் பார்வையிடாத மர்மம் என்ன.

சட்டசபைத் தேர்தலுக்கு முன்னர் சசிகலா கும்பல் என்ற திமுக
இன்று முரசொலியில் பிற்படுத்தப் பட்டவர் சசிகலா என்று கண்ணீர் வடிப்ப
தென்ன.

சோவே என்னைப் பாராட்டியிருக்கின்றார் என்று பலமுறை பெருமைப் பட்டுக் கொண்டுள்ள கருணாநிதி இன்று சோ போன்றோர் போயஸ் தோட்டத்தில் இருக்கின்றனர் என்றும் பார்ப்பன ஆதிக்கம் என்றும் பேசுவதென்ன.

பெரியவர் அன்னா உறசாரேயின் உண்ணாவிரதத்திற்குக் கூடிய கூட்டம் சிறை நிரப்பும் போராட்டம் என்றவுடன் குறைந்து போன மர்மம் என்ன.

கிரிமினல் வழக்கில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளி வந்த கனிமொழி அம்மையாருக்கு இத்தனை ஆர்ப்பாட்டமான் வரவேற்பைக் கண்ட பின்னரும் நீதி மன்றத்தில் சாட்சிகளை மிரட்டுகின்ற சூழலை உணர்த்தி சிபிஐ கனிமொழியின் ஜாமீனை ரத்துச் செய்ய முயற்சிக்காத மர்மம் என்ன.

ஒவ்வொரு கிராமமும் தனக்குத் தேவையானவற்றைத் தானே தயாரித்து தன்னிறைவு பெற வேண்டும் என்ற தேசத்தந்தைக்குப் புறம்பாக அந்நியர் முதலீட்டிற்கு அச்சாரம் போடும் காங்கிரஸ் தலைவர்கள் காந்தி சமாதியில் சென்று வணங்கச் செல்ல அருகதையற்றவர்கள் என்பதனை உணராத மர்மம் என்ன.

கோடிக் கணக்கில் கொள்ளையடித்திருக்கின்ற ஐஏஎஸ் அதிகாரி குடும்பத்திற்கு வருமான வரி விதித்திருக்கின்ற வருமான வரித்துறையின்
முட்டாள் தனத்தை என்ன சொல்ல.

அவர்கள் சொத்துக்களை அரசாங்கம் பறிமுதல் செய்யாத மர்மம் என்ன

Monday, August 1, 2011

திலகர் பிறந்த நன்னாள்

வ.உ.சி. பாரதி என்றுயர்ந்தோர் பல்லோர்
வழி காட்டித் தலைவன் என்று ஏற்ற வீரர்
ஊர் தோறும் மக்களிடை விடுதலை நம்
ஒவ்வொருவர் பிறப்புரிமை என உரைத்தோர்
சீரான கல்வியிலே உயர்ந்து நின்றோர்
சிறப்பான இந்தியத் தாய் பெற்ற மேலோர்
நாம் வணங்கி நிற்கின்றோம் திலகர் தன்னை
நாட்டுக்காய் வாழ்ந்த அவர் பிறந்த நாளில்

Wednesday, June 22, 2011

வர மாட்டிரா

எல்லோரும் மனிதர்கள் தான் இந்தியர் தான்
யாரெனினும் ஊழல் செய்தால் மிருகம் தானே
வல்லார் பிரதமராம் மக்களிடம்
வாக்குக்கள் பெற்றுச் சென்றார் கடவுளராம்
நல்லார் நினைத்தாலும் இவர்களையே
நாட்டு மக்கள் கேள்வி கேட்க விட மாட்டாராம்
அல்லாவே ஏசுவே சிவனே எங்கள்
அவல நிலை கண்டீரா வர மாட்டீரா

Monday, February 14, 2011

நெஞ்சு பொறுக்குதில்லையே

தாமஸ்ஸின் மீது குற்றப் பத்திரிக்கை இருப்பது தெரியாது என்று பிரதமரும் உள்துறை அமைச்சரும் சொல்லியுள்ளனர்.

வெளியுறவுத் துறை அமைச்சர் வேற்று நாட்டுத் தலைவர் உரையை ஐ.நா. சபையில் படிக்கின்றார்.

தலித் என்று ராஜாவைச் சொன்ன முதலமைச்சர் தலித்தை மட்டும் சிறைக்கு அனுப்பி விட்டு தன் குடும்பத்தினரைக் காப்பாற்றிக் கொள்கின்றார்.

நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பாரதியின் வரிகள்
நெஞ்சைச் சுடுகின்றது

Thursday, February 3, 2011

வாக்கு பிச்சை போடு

ராசாவைக் கைது செய்து விட்டோம் விட்டோம் மத்த
ராப்பாடி கூட்டத்தையே விட்டோம் விட்டோம்
பேசாம இருக்கதுக்கு ராசா கிட்ட நாங்க
பேரமெல்லாம் பேசி விட்டோம் நல்லா நல்லா
கூசாமல் கூட்டணியும் வைப்போம் வைப்போம் நாங்க
கொள்கை என்ற கெட்ட வார்த்தை விட்டோம் விட்டோம்
வா சாமி வந்து போடு வாக்கை வாக்கை நாங்க
வாழ்வாங்கு வாழ்வதற்கு பிச்சை போடு

Tuesday, February 1, 2011

பில்லி சூனியம் எடியுரப்பா

எனக்கெதிராக பில்லி சூனியம் வைத்திருக்கின்றார்கள்
எடியூரப்பா


வாய்ப்பிருந்தால் மொத்தத் தலைவர்க்ளுக்கும் அல்ல்வா
வைத்திருப்பார்கள் மக்கள்

Friday, January 28, 2011

உள்துறையும் பிரதமரும் ஒண்ணு போல வாழ்க

நல்ல செய்தி நல்ல செய்தி நாட்டோரே நல்ல செய்தி


தோற்றுப் போயும் நாட்டையே காப்பாற்றும் பொறுப்பில் இருக்கும் உள் துறை அமைச்சருக்கும் வாய் திறக்க முடியாமலேயே வாழ்ந்து
கொண்டிருக்கும் பிரதமருக்கும் தாமஸ் மேல் கேரள அரசு தொடர்ந்
திருந்த ஊழல் வழக்குத் தெரியாமலே போயிருக்கு.

எவ்வளவு குழந்தை மனசு கொண்ட பிரதமர் விரல் சூப்பத் தெரியாத
உள்துறை அமைச்சர்.

நாமிருக்கும் நாடு நம தென்ப தறிந்தோம் அது
நமக்கே உடைமையாம் என்பதறிந்தோம்

இந்த வரிகளை எழுதியது எங்க அப்பன் பாரதி

வாழ்க பாரதி நாமம்

Wednesday, January 26, 2011

குடியரசு தின நற்செய்திகள்

குடியரசுதின நற்செய்திகள்
வாழ்க நிதியமைச்சர்

வெளிநாடுகளில் இருக்கும் கருப்புப் பணப் பட்டியலை வெளி
யிட முடியாது

இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரி மஹாராஷ்டிராவில் மணற் கொள்ளையர்களால் எரித்துக் கொல்லப்
பட்டார்

கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் பிடித்துக் கொடுத்த திருடன் காவலர்களிடமிருந்து தப்பி ஒட்டம்

மகாத்மாவிற்கு ஜே
காமராஜ் நாமம் வாழ்க

Tuesday, January 25, 2011

காங்கிரஸ் பா ஜ க ஆண்டவன்

ஸ்பெக்ட்ரம் 2 ஜி ஊழல் என்றால் எடியூரப்பா ஊழல் என்கின்றனர்
காங்கிரஸ் நண்பர்கள்.

ராசாவின் மீதும் கனிமொழி மீதும் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தயங்குவது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள.

எடியூரப்பா மீது நடவடிக்கைக்கு பா ஜ க தயங்குவது கர்நாடகாவை இழந்து விடக் கூடாதென்று.

இரண்டு பெரிய இயக்கங்களின் இழி நிலையைக் காண்கையில் இறைவனைத் தவிர யாரிடம் முறையிட.

Sunday, October 31, 2010

என்னை அல்ல

ஒரு நொடியில் சமஸ்தானம் அனைத்தையுமே
ஒருங்கிணைத்துத் தந்த படேல் எங்கள் வீரர்
சிறுமைகளே மனத்தில் இல்லாச் சிறந்த வீரர்
செய்கைகளால் பாரதத்தைச் சிறக்க வைத்தார்
தருகின்றார் பதவியினைக் கட்சி மேலோர்
தக்கவர்தான் பதில் தந்தார் நீங்கள் அல்ல
வறுமையிலும் நோயிலுமே வாடும் மக்கள்
வாழ்த்துவது நேருவையே என்னை அல்ல

வாழ்க இந்திரா

இந்திய முகவரி என்று சொன்னால்
என்றுமே எங்குமே அன்னையவர்
விந்தியம் இமயம் விரிகடல்கள்
வித வித மக்கள் அனைவருக்கும்
சொந்தமாய்த் தாயாய் அவர் இருந்தார்
சுட்டனர் மூடர்கள் இல்லத்துள்ளே
வந்தனை செய்வோம் அவரை இன்று
வழி தனில் செல்வோம் வாழ்க இந்திரா

Friday, October 8, 2010

புரியவில்லை

வெள்ளையரின் அடிமைகளாய் இருந்தோம் என்று
வெளிச்சமிட்டுக் காட்டுதற்காய் ஒரு அமைப்பு
துள்ளி விளையாடுகின்றார் டில்லி மண்ணில்
துவக்கி வைக்க இளவரசர் வந்து சென்றார்
எண்ணுகின்றேன் எண்ணுகின்றேன் இவ்வமைப்பு
ஏதுக்காய் இருக்கின்றது கேவலமாய்
மண்ணுலகில் அடிமைகளாய் இருந்ததனை
மறக்காமல் இருப்பதற்கா புரியவில்லை

Thursday, August 26, 2010

கோயிலும் தான் உனக்கில்லையே

தங்களுக்குத் தாங்களே சம்பளத்தைத்
தாறுமாறாய்க் கூட்டிக் கொள்ளும் தங்கங்களை
எங் களுக்கு நாடாளு மன்றத்திற்காய்
ஏன் தந்தாய் எம் இறைவா கோபம் என்ன
பங்கமிது என்றுணராப் பாவியர்கள்
பாவப்பட்ட மக்களையே நினைத்தாரில்லை
எங்களது மக்களவை எமக்கு இல்லை
என் செய்வாய் கோயிலும் தான் உனக்கில்லையே

Tuesday, August 24, 2010

பழசிராஜா

சாவதற்கு அஞ்சி நாட்டைக் காட்டித் தரும்
சளுக்கர்களின் மத்தியிலே நாடு காக்க
ஆவதெல்லாம் நாட்டிற்காய் ஆவதென்று
அந்நியரை எதிர்த்து வீரப் போர் புரிந்த
காவல் ராசன் பழசி ராஜா படத்தை நேற்று
கண்களிலே நீர் மல்க பார்த்திருந்தேன்
பாவம் அவன் போன்றோர் வாழ்ந்த நாட்டினிலே
பரத்தமையைக் கொண்டிருப்போர் ஆள்கின்றாரே

Saturday, August 21, 2010

நாடாளுமன்றமும் சம்பளமும்

மக்கள் சேவை செய்ய வந்த மாமனிதர்
மனம் போல சம்பளத்தை வேண்டுகின்றார்
தக்கவர்கள் ஒழிந்து விட்ட நாட்டில் இந்த
தரித்திரர்கள் தனைக் காக்க வேண்டும் என்றே
மக்களவை இவர்களுக்குச் சம்பளத்தை ஆகா
மனம் போன படி உயர்த்தித் தந்தும் இவர்
அக்கணமே காணா தென்று ஆடுகின்றார்
ஆடு மாடாய் மக்களினைக் காணுகின்றார்

Sunday, August 15, 2010

விடுதலை பெற்றோம்

விடுதலை பெற்றோம் விடுதலை பெற்றோம்
வெண்மை உண்மை பெற்றோமா
விடுதலை பெற்றோம் விடுதலை பெற்றோம்
விரிந்த மனதைப் பெற்றோமா
விடுதலை பெற்றோம் விடுதலை பெற்றோம்
வீரம் விவேகம் பெற்றோமா
விடுதலை பெற்றோம் விடுதலை பெற்றோம்
வீழ்ந்தார் தம்மை நினைத்தோமா


விடுதலை பெற்றோம் விடுதலை பெற்றோம்
வீணர்கள் தம்மை ஆள விட
விடுதலை பெற்றோம் விடுதலை பெற்றோம்
வேதனை நம்மைச் சூழ்ந்து விட
விடுதலை பெற்றோம் விடுதலை பெற்றோம்
வெட்கம் விட்டவர் தலைமை கொள
விடுதலை பெற்றோம் விடுதலை பெற்றோம்
வெளி நாட்டவர்கள் வணிகம் செய

Sunday, August 1, 2010

சம்பளமும் உயர்ந்ததம்மா

துன்பங்கள் அனுபவிப்பார் அவரைப் போலே
துடித்தழுது நிற்பவர்கள் யார் தான் உண்டு
இன்பம் என்ற வார்த்தை அவர் வாழ்க்கையிலே
என்றைக்குக் கண்டார்கள் அய்யோ பாவம்
புண்பட்ட அவர் வாழ்வில் இன்பம் சேர
பொறுப்பாக அரசு ஒருமுடிவெடுக்க
பண்பட்ட உறுப்பினர்கள் நாடாளுமன்றப்
பாவம் அவர் சம்பளமும் உயர்ந்ததம்மா

Saturday, June 19, 2010

ராகுல் பிறந்த நாள் வாழ்த்து

ஆசைகளை அறுத்தவனாய் வாழுகின்றான்
அடக்கமதைக் கொண்டவனாய்ச் சிறந்து நின்றான்
பாசமதை நாட்டின் மேல் வைத்தவனாய்
பண்பு நலன் குறிக்கோளாய் உயருகின்றான்
வீசுகின்ற தென்றலெனப் பேசுகின்றான்
வெற்றி வழி உண்மையென்று போற்றுகின்றான்
தேசமிதைக் காப்பதற்காய் இறைவன் ஈந்த
தேசு மிக்க ராகுலை வாழ்த்துகின்றோம்

Friday, May 21, 2010

சோனியாவைப் போற்றுகின்றோம்

பசித்துன்பம் வறுமையென வாழ்நாள் எங்கும்
படுகின்ற துயரமது மேலும் மேலும்
நசுக்கி நிற்க ஏழை மக்கள் அழுது நோக
நாடாள்வார் கோடிகளில் புரளும் கோலம்
உசுப்பி விட ஆயுதங்கள் உயருவதை
உணர்ந்து அதைக் களைய வேண்டும் என்று சொன்ன
திசையெல்லாம் போற்றுகின்ற சோனியாவை
தேசமெங்கும் ஏழைகள் தான் போற்றுகின்றார்