Friday, January 6, 2012

புரியவில்லை

புரியவில்லை

சிதம்பரத்திற்கெதிராக இத்தனை வேகம் காட்டும் சுப்ரமணியசாமி
மாறன் சகோத்ரர்களைப் பற்றி பேசாத மர்மம் என்ன.

புதுச்சேரியில் புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட தமிழர் சிதம்பரம் கடலூர் பகுதியைப் பார்வையிடாத மர்மம் என்ன.

சட்டசபைத் தேர்தலுக்கு முன்னர் சசிகலா கும்பல் என்ற திமுக
இன்று முரசொலியில் பிற்படுத்தப் பட்டவர் சசிகலா என்று கண்ணீர் வடிப்ப
தென்ன.

சோவே என்னைப் பாராட்டியிருக்கின்றார் என்று பலமுறை பெருமைப் பட்டுக் கொண்டுள்ள கருணாநிதி இன்று சோ போன்றோர் போயஸ் தோட்டத்தில் இருக்கின்றனர் என்றும் பார்ப்பன ஆதிக்கம் என்றும் பேசுவதென்ன.

பெரியவர் அன்னா உறசாரேயின் உண்ணாவிரதத்திற்குக் கூடிய கூட்டம் சிறை நிரப்பும் போராட்டம் என்றவுடன் குறைந்து போன மர்மம் என்ன.

கிரிமினல் வழக்கில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளி வந்த கனிமொழி அம்மையாருக்கு இத்தனை ஆர்ப்பாட்டமான் வரவேற்பைக் கண்ட பின்னரும் நீதி மன்றத்தில் சாட்சிகளை மிரட்டுகின்ற சூழலை உணர்த்தி சிபிஐ கனிமொழியின் ஜாமீனை ரத்துச் செய்ய முயற்சிக்காத மர்மம் என்ன.

ஒவ்வொரு கிராமமும் தனக்குத் தேவையானவற்றைத் தானே தயாரித்து தன்னிறைவு பெற வேண்டும் என்ற தேசத்தந்தைக்குப் புறம்பாக அந்நியர் முதலீட்டிற்கு அச்சாரம் போடும் காங்கிரஸ் தலைவர்கள் காந்தி சமாதியில் சென்று வணங்கச் செல்ல அருகதையற்றவர்கள் என்பதனை உணராத மர்மம் என்ன.

கோடிக் கணக்கில் கொள்ளையடித்திருக்கின்ற ஐஏஎஸ் அதிகாரி குடும்பத்திற்கு வருமான வரி விதித்திருக்கின்ற வருமான வரித்துறையின்
முட்டாள் தனத்தை என்ன சொல்ல.

அவர்கள் சொத்துக்களை அரசாங்கம் பறிமுதல் செய்யாத மர்மம் என்ன

1 மறுமொழிகள்:

said...

அத்தனையும் அப்பட்டமான உண்மைகள் அய்யா!!

அருமை!