இந்து முன்னணி என்ற பெயரில் சாதி
எச்சத்தைக் காட்டுகின்றார் சில பேரிங்கு
முந்தி ஒரு இராமன் வைத்த சிவனை அங்கு
முறையாகக் கருவறைகள் கட்டிக் காத்தான்
அந்த ஒரு கண்டி வேந்தன் அதற்கு பின்னர்
அடுக்கான பிரகாரம் கோபுரங்கள்
செந்தமிழாய் வாழ்ந்துயர்ந்த சேதுபதி
செம்மறவர் பெருங் கூட்டம் செய்ததங்கு
முந்தி உள்ளே பிரகாரம் சேவைகளை
முத்தமிழின் நகரத்தார் தேவகோட்டை
சொந்த ஜமீன் செய்து வைத்தார் பின்னர் அங்கே
ஜோதி மய லிங்கத்தை வந்து சென்ற
அந்தணராம் ஆதி சங்கராச்சாரியார்
அவர் கொண்டு வழி படவே வைத்துச் சென்றார்
சந்ததமும் மராட்டியர்கள் பூஜை செய்யும்
சரித்திரமும் அன்று தான் உருவாயிற்று
இந்த விதம் உருவான கோயில் ஒன்றே
இராமேஸ்வரத்துக் கோயில் அதிலே இன்று
பந்தம் உள்ளோர் குட முழுக்குச் செய்த அன்று
பைந்தமிழின் துறவியர்கள் இருவர் அங்கு
சென்று வழி பட்டதிலே இருவர் அங்கே
சீறுகின்றார் அவர் இருவர் உள்ளே உள்ளே
சென்றனராம் அது தவறாம் கூறுகின்றார்
சீர் கெட்ட தமிழர்களால் வந்த கேடு
குன்றக்குடி மடமும் மதுரையுமே
குற்றத்திற்கு ஆளாகியுள்ளார் அந்தோ
நின்றருளும் எம் சிவனுக்கு உரிமையானோர்
நிந்திக்கப் படுகின்றார் சாதியாலே
இன்றுணர்வீர் தமிழினத்தீர் மதத்தைச் சொல்லி
ஏய்ப்பவர்கள் ஒரு சாதிக்காரர் என்று
கன்றினைப் போல் அவர் பின்னால் ஒடுகின்ற
கண் மூடித் தனம் விட்டு விலகி வாரும்
Showing posts with label இந்து முன்னணி. Show all posts
Showing posts with label இந்து முன்னணி. Show all posts
Sunday, July 12, 2009
விலகி வாரும் இந்து முன்னணி
Subscribe to:
Posts (Atom)