Showing posts with label நான். Show all posts
Showing posts with label நான். Show all posts

Wednesday, January 4, 2012

எனது இந்த மாத நிகழ்வுகள்

எனது இந்த மாத நிகழ்வுகள்

ஜனவரி 7 ம் தேதி
பவானி திருமுறை மன்றம்
சங்கமேஸ்வரர் திருக்கோயில் மாலை 7 மணி
பொருள் சைவமும் பெண்மையும்

ஜனவரி 10 பெரியகுளம் அரசினர் தோட்டக் கலைக்
கல்லூரி முத்தமிழ் மன்றம்
காலை மணி 10

ஜனவரி 13 ஏ.வி.பி.அறக்கட்டளை
மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி
மாலை 5 மணி பொருள் எது செல்வம்

ஜனவரி 15 பாளை சிவன் கோயில்
பொருள் பட்டினத்தார்

ஜனவரி 17 புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள்
திருநெல்வேலி
சுழலும் சொல்லரங்கம்

ஜனவரி 18 திருநெல்வெலி தாம்பிரபரணி இலக்கிய மன்றம்
விருதுகள் வழங்கி உரை நிகழ்த்தல்

ஜனவரி 25 திருமுருகன் பூண்டி திருக்கோயில் விழா
மாலை 7 மணியள்வில்
பொருள் குந்தியின் மைந்தன்

ஜனவரி 26 நெல்லை மாவட்டம் திருமலாபுரம்
பட்டி மண்டபம்

ஜனவரி 29 கல்லல் அய்யா தண்ணீர்மலைச் செட்டியார்
அவர்கள் இல்லத் திருமண் விழா

Sunday, December 18, 2011

நன்றி

நெல்லைக்கு வருகின்ற நல்லவர்கள்
நேராக என் இல்லம் வருகின்றார் காண்
அள்ள அள்ளக் குறையாத அன்னை தமிழ்
அளித்திட்ட அன்பெல்லாம் பகிர்கின்றார் காண்
கொள்ளை கொண்டு செல்கின்றார் எந்தன் உள்ளம்
கோடி யென்ன கோடி அவை தூசு என்பேன்
நல்லவரே உங்களது அன்பினால் தான்
நான் இன்றும் வாழுகின்றேன் நன்றி நன்றி

Monday, December 5, 2011

பண்புகளால் வென்றிடலாம்

அன்பு செய்து வாழுங்கள் வறியவர்க்கு
ஆன மட்டும் உதவுங்கள் உதவி வேண்டி
நண்பரல்லார் வந்தாலும் மன மகிழ்ந்து
நலம் பலவும் செய்யுங்கள் உறவார் கூட
பண்பின்றி பல துன்பம் தந்திருந்தும்
பசித் துன்பம் இன்றி அன்பாய்க் காத்திடுங்கள்
கண்ணுதலின் பேரிறைவன் காத்து நிற்பான்
கவலையின்றி பண்புகளால் வென்றிடலாம்

Wednesday, November 30, 2011

இறைவன் துணை

புரியாமல் வாழுகின்றேன் அன்பை நம்பி
போற்றுவோர் தூற்றுவோர் அனைவரிடம்
அறியாமல் வாழுகின்றேன் என்றே பலர்
ஆதங்கம் கொள்கின்றார் என்னிடத்தில்
சிறியாராய் அவர் நடந்தால் எனக்கு என்ன
சிந்தித்தே முறையாய்த் தான் வாழுகின்றேன்
வறியானாய் ஆனாலும் எந்தனது
வழி முறைகள் மாறாது இறைவன் துணை