Monday, December 5, 2011

பண்புகளால் வென்றிடலாம்

அன்பு செய்து வாழுங்கள் வறியவர்க்கு
ஆன மட்டும் உதவுங்கள் உதவி வேண்டி
நண்பரல்லார் வந்தாலும் மன மகிழ்ந்து
நலம் பலவும் செய்யுங்கள் உறவார் கூட
பண்பின்றி பல துன்பம் தந்திருந்தும்
பசித் துன்பம் இன்றி அன்பாய்க் காத்திடுங்கள்
கண்ணுதலின் பேரிறைவன் காத்து நிற்பான்
கவலையின்றி பண்புகளால் வென்றிடலாம்

0 மறுமொழிகள்: