Sunday, December 11, 2011

ஏளனம் செய்ய விட்டார்

பாரதி பிறந்தான் இந்தப் பைந்தமிழ் நாட்டில் வந்து
வேரெது விழுதெது என்ற விபரங்கள் சொல்லுதற்காய்
ஆரதைக் கேட்டார் இங்கு அவரவர் ஆட்டம் போட்டார்
சீரெதும் நினைத்தாரில்லை சிந்தனை இழந்தே நின்றார்
நீரிதன் புதல்வர் என்ற நினைவினை அகற்றி விட்டு
ஊரெல்லாம் கொள்ளையிட்டார் உறவிற்கே பந்தலிட்டார்
யாரிவர் என்று இந்த மக்களைக் கலங்க விட்டார்
யாவரும் நம்மைப் பார்த்து ஏளனம் செய்ய விட்டார்

0 மறுமொழிகள்: