Showing posts with label வ.உ.சி.. Show all posts
Showing posts with label வ.உ.சி.. Show all posts

Tuesday, July 8, 2008

வ.உ.சி.40 ஆண்டு சிறைத்தண்டனை

ஆர்ப்பரிக்கும் கடலினிலே கப்பல் விட்டு
அதன் முலம் வெள்ளையரை எதிர்த்து நின்று
போர்ப் பரணி பாடி நின்ற சிதம்பரத்தார்
பொது வாழ்வில் தனை அ(ழி)ளித்த பொன் மனத்தார்
சீர் பரவி நின்றாரா தமிழர் நாட்டார்
செய்த நன்றி மறந்தாரே அந்தோ அந்தோ
நீர் நிறைந்த கண்களுடன் நினைந்து நொந்தேன்
நெஞ்செல்லாம் புண்ணாகிப் புலம்புகின்றேன்

பார் முழுதும் அரசியலில் பங்கு பற்றி
பல விதமாய்ப் பாடு பட்டோர் இடையில் தன்னின்
சீர் அனைத்தும் இழந்து நின்ற சிதம்பரத்தை
செக்கிழுத்து நமக்குழைத்த செந்தமிழை
ஆர் நினைத்துப் பார்க்கின்றார் அந்தோ அந்தோ
அடிமை விலங்கறுத்தவரை மறந்தார் அந்தோ
ஊர் முழுதும் தவறானோர் விழாக்கள் காணும்
ஊமை மக்காள் உணர்ந்திங்கு பழி நீக்கீரோ