Monday, August 1, 2011

திலகர் பிறந்த நன்னாள்

வ.உ.சி. பாரதி என்றுயர்ந்தோர் பல்லோர்
வழி காட்டித் தலைவன் என்று ஏற்ற வீரர்
ஊர் தோறும் மக்களிடை விடுதலை நம்
ஒவ்வொருவர் பிறப்புரிமை என உரைத்தோர்
சீரான கல்வியிலே உயர்ந்து நின்றோர்
சிறப்பான இந்தியத் தாய் பெற்ற மேலோர்
நாம் வணங்கி நிற்கின்றோம் திலகர் தன்னை
நாட்டுக்காய் வாழ்ந்த அவர் பிறந்த நாளில்

0 மறுமொழிகள்: