Tuesday, August 9, 2011

விதிதான் போலும்

வெள்ளையனே வெளியேறு என்று காந்தி
வீரமுடன் முழக்கமிட்ட நன்னாள் இந்நாள்
கள்ளமில்லாக் கதராடை உள்ளம் போல
கண்ணியத்தின் பேரூருவம் கொண்டார் எல்லாம்
துள்ளி அன்று வந்தார்கள் விடுதலைக்காய்த்
துச்சமென உணர்ந்தார்கள் உயிரை அன்று
எள்ளி நகையாடுகின்ற நிலையில் இன்று
இருக்கின்றோம் என்ன செய்ய விதி தான் போலும்

1 மறுமொழிகள்:

said...

உங்களை பார்க்கும் போது உங்கள் உரையை எனக்கு ஒரு உற்சாகம் கிடைக்கும் Chairman -நகர தந்தை என்ற தமிழ் கொலையை நீங்கள்( நகர அத்தை செல்கிறார் ) நையாண்டி செய்தது என் மனதில் பதிந்து விட்டது .தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் தங்களின் பாங்களிப்பு மிக அருமை.
நீங்கள் தேசியத்தில் கலந்த தமிழ் கடல் வாழ்க