Tuesday, August 30, 2011

கலைவாணர் என்.எஸ்.கே. நினைவு நாள்

சிந்திக்க வைப்பதற்கே சிரிக்க வைத்தான்
செந்தமிழர் மனத்தி லெல்லாம் நிலைத்து நின்றான்
மந்திரத்து மாய்மாலம் ஒழிப்பதற்கோ
மனம் தெளிந்து சிரிக்க வைத்து வெற்றி கண்டான்
இந்திரனின் ஆட்சியிலும் மது ஒழிக்க
எண்ண வைத்த கூத்து ஒன்றை ஆடி வைத்தான்
நந்தனையே மனம் கொண்டு கிந்தனையே
நமக்களித்து கல்வியினை உணர வைத்தான்

0 மறுமொழிகள்: