Sunday, September 11, 2011

சிந்தையில் உயிர்த்த நன்னாள்

தங்க நிகர் இமயமே தலைப்பாகை என்றொரு
தனிக் கர்வம்கொண்டிருந்தான்
தலைப்பாகைக்குள்ளேயோ தமிழையும் நாட்டையும்
தாங்கிய பெருமை கொண்டான்
சிங்க நிகர் வீரர்கள் தமிழர்கள் என்றொரு
செருக்கினைக் கொண்டு வாழ்ந்தான்
செந்தமிழ்த் தாய் பெற்ற சீராளன் பாரதி
சிந்தையில் உயிர்த்த நன்னாள்

0 மறுமொழிகள்: