Tuesday, August 24, 2010

பழசிராஜா

சாவதற்கு அஞ்சி நாட்டைக் காட்டித் தரும்
சளுக்கர்களின் மத்தியிலே நாடு காக்க
ஆவதெல்லாம் நாட்டிற்காய் ஆவதென்று
அந்நியரை எதிர்த்து வீரப் போர் புரிந்த
காவல் ராசன் பழசி ராஜா படத்தை நேற்று
கண்களிலே நீர் மல்க பார்த்திருந்தேன்
பாவம் அவன் போன்றோர் வாழ்ந்த நாட்டினிலே
பரத்தமையைக் கொண்டிருப்போர் ஆள்கின்றாரே

0 மறுமொழிகள்: