Friday, August 27, 2010

ஆண்டவரே என்ன சொல்வீர்

நாணமே யில்லாதார் பொறுப்புக் களில்
நாயகராய் அமர்ந்திருக்க அந்தோ அந்தோ
ஊனமுற்ற நாடாகத் தமிழர் நாடு
ஒலமிட வழியின்றி ஒடுங்கி நிற்க
கானம் ஒரு குடும்பம் மட்டும் பாடி நிற்க
கணக்கில்லா நல்லவர் வாய் மூடி நிற்க
ஆனதென்ன எம் நிலைமை இவ்வாறாக
ஆண்டவரே உம் நிலை தான் என்ன சொல்வீர்

0 மறுமொழிகள்: