Sunday, August 29, 2010

கேவலத்தில் உழல்வதைப் பார்

அவரவர்க்கு சிலை அவரே வைத்துக் கொள்ளும்
அளவிற்குக் தமிழ்நாட்டைக் கெடுத்து உள்ளார்
தவறதனை ஒழுக்கமாக்கி வாழ்ந் திருக்கும்
தலைவரவர் தன் குடும்பம் வாழ்வதற்காய்
கவலையின்றி இலவசங்கள் வழங்குகின்றார்
கையூட்டாய் மானமுள்ள தமிழருக்கு
உலகு போற்றும் முதற் பண்பைக் கொண்ட இனம்
உளம் இழந்துக் கேவலத்தில் உழல்வதைப் பார்

0 மறுமொழிகள்: