Wednesday, August 25, 2010

விருதேயில்லை

ஆபாச அரசியலார் எல்லாம் இங்கே
அடுக்கடுக்காய் டாக்டர் பட்டம் வாங்கி விட்டார்
மேலான விளையாட்டாம் சதுரங்கத்தில்
மேனாட்டார் அனைவரையும் வென்று நின்ற
சீராளர் விஸ்வநாதன் கேட்கவில்லை
செப்பியது அரசாங்கம் பட்டம் என்று
ஊரெங்கும் தேசியக்கொடி யோடாடும்
உண்மையாளர் ஊர் குறித்துக் கேள்வி கேட்டு
வேரதனிலே வெந்நீரை ஊற்றி விட்டார்


நாராசமாக்கி விட்டார் நமது நாட்டின்
நலமறியா அரசாங்க அதிகாரிகள்
தாராளமாக இங்கு டாக்டர் பட்டம்
தருகின்றார் அனைவருக்கும் விலை தான் கூட
போராடி வெல்கின்ற விஸ்வநாதன்
போன்றோர் இவ் விருதையெல்லாம் வேண்டாம் என்றல்
பாராட்டுக்கு ரியதுதான் வாங்கினால்தான்
பரிதாபம் இதுவெல்லாம் விருதேயில்லை

1 மறுமொழிகள்:

said...

/போராடி வெல்கின்ற விஸ்வநாதன்
போன்றோர் இவ் விருதையெல்லாம் வேண்டாம் என்றல்
பாராட்டுக்கு ரியதுதான் வாங்கினால்தான்
பரிதாபம் இதுவெல்லாம் விருதேயில்லை/

உண்மை அண்ணா!
நம் அரசியல் வாதிகள் ஏன்? இவ்வளவு சிறுமதி படைத்தோராகவுள்ளார்கள். புரியவில்லையே!