Tuesday, August 24, 2010

காவ்யா (அமெரிக்கத் தமிழ்ப் பெண்

பன்னி ரேண்டே வயதான சிறுமி யவர்
பைந்தமிழர் மரபில் வந்த காவ்யாதான்
எண்ணுகையி லெங்கேயோ உயர்ந்து உள்ளார்
இப்போதே கல்லூரி படிக்கின்றாராம்
வண்ண மயக் கணிதத்தில் சாதனைகள்
வகை வகையாய்ப் புரிந் துள்ளார் இசையினிலும்
பின்னுகின்ற வயலினிலே பெரியவராம்
பிழையின்றித் தமிழ் படித்து எழுதுவாராம்

அன்னையவர் சொல்லுகின்றார் பிள்ளைகளை
அரவணைக்கும் வழியதனை மற்றவர்க்கு
மின்னுகின்ற காவ்யா அமெரிக் காவில்
மென்மேலும் வெற்றிகளைக் குவிக்க வேண்டும்
கண்ணழகுப் பெண்ணாளும் மிகச் சிறந்த
கணித வழி நூற்கள் பல எழுத வேண்டும்
பெண்ணாளின் அறிவுயர்ந்து உலகம் வெல்ல
பெரியவர்கள் அனைவருமே வாழ்த்தி நிற்போம்

0 மறுமொழிகள்: