Sunday, August 1, 2010

வழி காட்டப் பிறந்தோர் அன்றோ

உறவுகளை நட்பாக ஆக்கிக் கொள்ளும்
உயர் குணத்தைக் கொண்டாலே வெற்றி அன்றோ
சிறந்தோங்கும் நட்பை யெல்லாம் உறவாய் ஆக்கி
சீராக வாழ்வது நற் சிறப் பேயன்றோ
மறந்து விட்டோம் குறளாசான் தன்னை நாமும்
மனிதருக்கு என்னவெல்லாம் சொல்லித் தந்தான்
உயர்ந்திடுவோம் மனிதரென வாழ்வோம் நாமும்
உலகுக்கு வழி காட்டப் பிறந்தோர் அன்றோ

0 மறுமொழிகள்: