Tuesday, March 13, 2012

கண்ணதாசனின் திரைப் படப் பாடல்கள்

சாதி என்றும் மதங்கள் என்று இன்றும் பிரிந்து அழியும் மனித குலத்திற்கு ஒரு மகத்தான செய்தியினைச் சொல்லுகின்றார் கண்ணதாசன்.கர்ணன் தாய் தந்தை யாரென்று அறியாதவன்.அதே அவன் வாழ்க்கையில் அவனுக்குப் பல இடங்களிலே அவமானங்களைத் தருகின்றது.அவனுக்குப் பெண் தந்த மன்னன் அவன் பிறப்பு குறித்து அவமானப் படுத்துகின்றான். கர்ணனின் மனைவி அவனைத் தேற்றுகின்றாள்.அதற்கான பாடல் கே.வி.மகாதேவனின் அருமையான இசையில்.

இது கண்ணதாசன் அவர்களுக்கு மட்டுமே இறைவன் அருளிச் செய்தது. பாடலில் மூழ்குங்கள்.

எல்லா உயிரினங்களுக்கும் கண்தான் வாழ்க்கை.
கண்ணதாசன் கேட்கின்றார்.

கண்ணுக்குக் குலமேது என்று என்ன கேள்வி.இன்று உலகம் முழுவதும் ஒருவர் கண் இன்னொருவருக்குப் பொருத்தப் படுகின்றது.
அங்கே சாதி உணர்வுகள் இல்லை. மதங்கள் பார்க்கப் படுவதில்லை.
தன் கணவனிடம் அவன் சமூகத்தின் கண் என்கின்றாள். ஆமாம் அவனுக்குக் கண் இருப்பதனாலே தான்கொடுத்துக்கொண்டேயிருக்கின்றாண்..

அடுத்த கேள்வி கருணைக்கு இனமேது எங்கே பதில் சொல்லிப் பருங்கள்.உயிர்களிடத்தில் அன்பு கொள்கின்ற பெரு மனமாம் கருணை என்ன இனத்தைச் சார்ந்தது.

விண்ணுக்குள் பிரிவேது விளக்குக்கு இருளேது என்கின்றார்.விண்ணுக்குள் விஞ்ஞான பிரிவுகள் சொல்ல முயலலாமே ஒழிய ஏது பிரிவு. அடுத்த கேள்வி விளக்குக்கு இருளேது. எத்தனை சிந்தனைத் திறன் கொண்ட கேள்வி இது.

பாலினில் இருந்தே நெய் பிறக்கும் கண்ணா பரம்பொருள் கண்டே உயிர் பிறக்கும் வீரத்தில் இருந்தே குலம் பிறக்கும் அதில் மேலென்றும் கீழென்றும் எங்கிருக்கும். ஒருவனை அந்தக் காலத்தில் சத்திரியன் என்று அழைப்பதே அவன் வீரத்தை வைத்தே. அதனால்தான் பரசுராமரே அவனை சத்திரியன் என்று உணர்கின்றார். அவனிடமும் கேட்டதன் வாயிலாக அவனுக்கு ஒரு ஆறுதலும் தருகின்றார். சாமர்த்தியமாக வேறு யாரையோ புகழுவதற்காக கண்ணதாசனின் திரைப்
படப் பாடல்களை யாராவது இழிவு படுத்த நினைத்தால் அவர்கள் என்னவென்று அழைப்பது.

0 மறுமொழிகள்: