Tuesday, March 20, 2012

மனிதனென வாழ விடு

இல்லாதார்க் குதவுகின்றேன் என்ற எண்ணம்
எனக்கு வரின் நான் என்ன மனிதனாவேன்
பொல்லாத அவ்வெண்ணம் என் மனதில்
புகுந்து விடின் அவமானம் கொண்டழுவேன்
கல்லாதான் போல அங்கு என்னை நானே
கடிந்து கொள்வேன் அய்யகோ அழுது தீர்ப்பேன்
வல்லாளா என் சிவனே என்னை இங்கே
வாழ வைத்தாய் மனிதனென வாழ விடு

1 மறுமொழிகள்:

said...

//இல்லாதார்க் குதவுகின்றேன் என்ற எண்ணம்
எனக்கு வரின் நான் என்ன மனிதனாவேன்//
சிந்தனையை விதைத்த வரிகள்.