Sunday, March 25, 2012

புரியவில்லை

சச்சின் நூறாவது நூறு அடித்து விட்டார். அதனால் தான் வங்க தேசத்திடம் தோற்றோம் என்பதனை யாருமே சொல்ல மாட்டேன் என்கின்றார்களே.ஏன்.

ஆளும் கட்சி இடைத் தேர்தலில் வெல்லுவது ஒன்றும் புதிதில்லை என்கின்றார் கருணாநிதி.

அவர் தமிழ்நாட்டிலேயும் காங்கிரஸ் கட்சி மத்தியிலேயும் ஆட்சியில் இருந்த போதுதான் திண்டுக்கல் இடைத் தேர்தலில் எம்.ஜி.ஆர்.அவர்களின் அண்ணா தி மு க எதிர்த்து நின்ற திமுக பழைய காங்கிரஸ் இந்திரா காங்கிரஸ் அனைவரும் வாங்கிய வாக்குக்களை கூட்டிப் பார்த்தால் அதுதான் வெற்றி பெற்ற அண்ணா திமுக வேட்பாளர் மாயத் தேவருக்கும் அடுத்து வந்த திமுக வேட்பாளருக்கும் இடையிலான வித்தியாசம்.இரண்டு ஆளும் கட்சியினரையும் எம்.ஜி.ஆர். தோற்கடித்திருக்கின்றார் என்பதை எப்படி பெரியவர் மறந்து போனார்.

காங்கிரஸின் தோல்வி குறித்து வாய் கிழியப் பேசும் தொலைக் காட்சி அறிவாளிகள் பாரதீய ஜனதாவின் தோல்வி குறித்துப் பேச மாட்டேனென்கின்றனரே ஏன்.

0 மறுமொழிகள்: