Friday, April 29, 2011

ராஜா ரவிவர்மா பிறந்த நாள்

ஒவியத்தால் உள்ளங்கள் தன்னை வென்றோன்
உலகெங்கும் மயங்கி விடச் செய்த நல்லோன்
காவியத்துக் காட்சிகளைக் கடவுளரை
கண்ணியமாய் வரைந்தளித்த கனியின் மேலோன்
தாவி அவன் சித்திரங்கள் மனதிற்குள்ளே
தனியாகப் பதிவுபெற்று மகிழ வைக்கும்
பாவி ராஜா ரவி வர்மா என்னும் பாவி
படைப்பதற்காய்ப் படைப்பவனும் படைத்த நன்னாள்

1 மறுமொழிகள்:

said...

அவர் தன் ஓவியங்களால் என்றும் வாழ்வார்...