Sunday, November 4, 2012

மறக்க முடியாதவர்கள்

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி நிறைவு பெற்று விட்டது. சிறுவர் ஆஷிக் வெற்றி பெற்றூள்ளான். மிக நன்றாகவே பாடிய அவௌக்கு பரிசளிக்கப் பட்டது சரியே.

ஆனால் முதலில் இருந்தே கெளதமை ஒழிக்க நினைத்த நீதிபதிகள் சிலரைக் குறித்து மனதில் வேதனையாகவே இருந்தது.

மிகப் பெரிய கர்நாடக சங்கீத மேதைகளான அருணா சாய்ராம் அவர்களாலேயே கெளதம் கடவுளின் அருள் என்று  போற்றப் பட்ட பிறகும் பாம்பே சகோதரிகள் சுதா ரகுநாதன் நித்யஸ்ரீ மகாதேவன் உண்ணி கிருஷ்ணன் போன்றவர்கள் பாடகர் சீனுவாஸ் ஒரு நேரடி நிகழ்ச்சியிலே இப்படி இது வரை யாரும் பாடி நான் கேட்டதில்லை  என்றதோடு மட்டுமல்லாமல் காதல் பட பாடலை கெளதம் பாடிய போது அவர் நெகிழ்ந்து போனதும் சித்ரா அம்மா ஒரு தாயுள்ளத்தோடு அவரைப் பாராட்டிய போதும் ஒரு கிராமத்துச் சிறுவன் சங்கீதத்திற்கே சம்பந்தம் இல்லாத கிராமத்திலேயிருந்து வந்து பாடுகின்றான்
என்ற நினைவே இல்லாமல் அவன் குத்துப் பாடல்கள் பாட மட்டும் தெரிந்தவன் என்பது போல மால்குடி சுபாவும் தம்பி மனோவும் அவனை ஒவ்வொரு முறையும் அவமானப் படுத்த முயன்றது புரியவில்லை. அதிலும் மனோ அப்படி நடந்து கொண்டதே எல்லோருக்கும் வருத்தம் தந்தது. சித்ரா அம்மா நீ குத்துப் பாட்டு பாடுகின்றவன் என்று சொன்னவர்களுக்கெல்லாம் நீ
இன்றைக்குப் பதிலடி கொடுத்திருக்கின்றாய் என்றதற்குப் பிறகும் மால்குடி சுபா ஜிஞ்ன்க்க்டி யிலிருந்து மாறிட்டியே என்றது அநாகரிகத்தின் உச்சக்கட்டம்.வெறும் போட்டியாளர்களாகக் கருதாமல் அவர்களின் பின்புலமும் போட்டிகளில் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.

ஹரிசரண் திருப்பதி வந்தா திருப்பம் என்ற பாடலை கெளதம் பாடியபோது உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது பாடியவரா நீங்கள் என்று கேட்டதும் சுசித்ரா ஒரு சின்ன சங்கர் மகாதேவன் உருவாவதைக் காண்கின்றேன் என்றதும்.மிகச் சிறப்பாக பாடக் கூடியவன் குரல் மாற்றத்தினால் இவனுக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதை சொல்லி பாராட்டிய ஹரிஹரனும் மீண்டும் நீ இந்தியாவின் மிகப் பெரிய பாடகனாக விளங்குவாய் என்ற சுதா ரகுநாதன் அவர்களும் மறக்க முடியாதவர்கள்.

1 மறுமொழிகள்:

said...

சத்யாவைக் கைப்பி டித்துச்
சிலியாமல் மற்போ ராடி
நித்யாவை வென்ற வெங்கள்
நெல்லைவாழ் தமிழே! ஏதும்
உத்யோக மோஉ மக்கு?
ஓரிரு கிழமை யாக
அத்தா!நீ வலையின் பக்கம்
அண்டாமல் இருப்ப தேனோ?