Saturday, May 25, 2013

யாருக்கும் வெட்கமில்லை

கிரிக்கெட்டில் ஊழலை ஒழிக்கத் திட்டம். கிரிக்கெட்டையே ஒழித்து விட்டால் என்ன. பாய்காட் சொல்கின்றார். அந்த சூதாட்டத்தை சட்ட பூர்வமாய் அனுமதித்து விடுங்கள். அதுதான் அரசியல் இருக்கின்றதே.

ஏ.வி.எம்மின் பூட்டன் குருநாத் மெய்யப்பன் இந்தியா சிமிண்ட்ஸ் சீனிவாசன் மருமகன் பணத்திற்காக சூதாடி கைது செய்யப் பட்டிருக்கின்றார். அவர் மரியாதையுடன் கைது செய்யப் பட்டிருக்கின்ரார். ஸ்ரீசாந்த்தும் மூன்று கிரிக்கெட் வீரர்களும் உடன் கைது செய்யப் பட்டு முகமூடி அணியப் பட்டு தெருக்களில் இழுத்து வரப் பட்டனர்.

சென்னையில் ஒரு பணக்காரரின் மகன் கார்  ஒட்டி ஒரு சிறுவன் (ஏழை) இறந்திருக்கின்றான். மூன்று பேர் காயப் பட்டிருக்கின்றனர். அதை வேறு வழக்காகப் பதிவு செய்த காவல் ஆய்வாளர் உடனே வேறு இடத்திற்கு மாற்றப் பட்டிருக்கின்றார். கடுமையான தண்டனை.

வரதட்சணையால் பாதிக்கப் பட்ட ஒரு பெண். கணவன் பார்க்க கணிப் பொறி காமிராவின் வழியே தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார். வாழ்கவிஞ்ஞானம்..

என் பேரன் கேட்கின்றான். 2ஜி மாதிரிதானே இந்தக் கிரிக்கெட் ஊழ்லும் காணாமல் போகும் என்று. என்ன பதில் சொல்ல

எத்தனை நடந்தும் இறுதிப் போட்டி நடந்தே தீரும் சொல்கின்றனர்.

வெட்கமில்லை இங்கு வெட்கமில்லை யாருக்கும் வெட்கமில்லை


1 மறுமொழிகள்:

Anonymous said...

கொடுமை!