Tuesday, November 11, 2008

காத்து நிற்பாய்

அன்புக்காய் அலந்து நிற்கும் எந்தன் நெஞ்சை
  அறியார்கள் மத்தியிலே வாழ்ந்தலுத்தேன்
  தெம்பளிக்கும் அன்புதன்னை தருவதற்கு
  திருவானார் வருகைக்காய்க் காத்திருந்தேன்
  பண்புடனே அவர் வந்தார் நான்மலர்ந்தேன்
  பாசமதைக் கொண்டு வந்தார் அக மகிழ்ந்தேன்
  கண் மலராய் அவர் உறவைக் கொண்டு வாழ்வேன்
  காத்து நிற்பாய் என் இறையே மலரவரை

0 மறுமொழிகள்: