Friday, December 26, 2008

தகுதியேதும் இல்லாராகி

ஏசு வந்தார் சிலுவையிலே அடித்தோம் நல்ல
இசுலாத்தை இறைவன் அவர் தூதராக
மாசின்றிச் சொல்ல வந்த நபி பெருமான்
மடையர்களாய் அவர் மீதும் கல்லெறிந்தோம்
கூசாமல் பெரியவர்கள் அனைவரையும்
கொல்லுவதில் பெருமை கொண்டோம் மானிடரே
பேசுகின்றீர் பலவாறாய் பெருமை கொண்டு
பேசுதற்கு தகுதி யேதும் இல்லாராகி

0 மறுமொழிகள்: