Friday, October 30, 2009

வீணே ஆழிகின்றார்

உயிருக்குயிரே அன்பு என்று உணர்த்தி நின்றார் வள்ளுவரும்
உணரா மனிதர் பணத்தைத் தேடி ஒடி ஒடி அலைகின்றார்
பயிருக்குயிரே மழை என்பதனைப் பாரோர் அனைவரும் அறிந்திருந்தும்
பசுமைக் காட்டை அழித்து அழித்துப் பாழாய் தமையே அழிக்கின்றார்
வயலும் காடும் இல்லா வாழ்வு வாழ்வாகிடுமோ உயிர்கட்கு
வருத்தம் இன்றி மேலும் மேலும் வயல்கள் அழித்து ஒழித்தீரே
துயில வீடு கட்டும் மாந்தர் துயரே சேர்த்து வாழ்கின்றார்
தூய்மை அழிக்கும் யந்திர வாழ்வின் துணையில் வீணே அழிகின்றார்

0 மறுமொழிகள்: