Saturday, December 11, 2010

பாரதி தான்

பிறந்தவர்கள் அனைவருமே இறப்பார் என்ற
பெருஞ் செய்தி அது ஒன்றே உண்மைச் செய்தி
நிரந்தரமாய் வாழ்பவர் யார் தனை மறந்து
நிலந் தாங்கும் உயிர்களெல்லாம் வாழ்வதற்காய்
சிறந்த வழியனைத்தையுமே சொல்லி நல்ல
சிந்தனைகள் சிறப்பதற்கும் கவிதை சொல்லி
வரம் போல வந்தவர்தான் என்றும் வாழ்வார்
வாழ்கின்றான் இன்றும் எங்கள் பாரதி தான்

0 மறுமொழிகள்: