Thursday, May 12, 2011

அருளிச் செய்ய வேண்டும்

ஒரு வேட்டி ஒரு துண்டு கொண்டவராய்
ஊரெங்கும் ந்டந்து செல்லும் வல்லவராய்
மருவில்லா மனத்தவராய் சுய நலத்தால்
மாறாத மனம் கொண்ட நல்லவராய்
கருவிருக்கும் குழந்தை கூட வணங்குமாப் போல்
கண்ணியத்தின் பேரூருவாய் வாழும் மாந்தர்
திரு நாட்டை ஆளுகின்ற காலமொன்றைத்
தெய்வமே நீ அருளிச் செய்ய வேண்டும்

0 மறுமொழிகள்: