Monday, July 11, 2011

பிறந்தீர் என்று

வள்ளுவனார் பிறந்து விட்ட தமிழர் நாட்டில்
வசைகளோடு வாழ்கின்றார் வெட்கமின்றி
உள்ளுகின்றார் நல்லவர்கள் இவற்றை யெல்லாம்
உள்ளத்துள் குருதியுடன் புலம்புகின்றாரே
எள்ளி நகையாடுகின்றார் தவற்றால் வாழ்வார்
எவரையுமே ஏய்த்ததிலே பெருமை கொண்டு
வள்ளுவனை நினைக்கின்றோம் அய்யா நீர் ஏன்
வந்து எங்கள் தமிழகத்தில் பிறந்தீர் என்று

0 மறுமொழிகள்: