Thursday, July 14, 2011

மும்பையில் குண்டு

மனிதர்களுக்கு அன்பினையே அருளிச் செய்த
மதங்களுக்குள் நன்மைகளே உண்டு உண்மை
தனி மனிதர் சிலர் இதனைப் புரியாராகி
தவறுகளைச் செய்கின்றார் தனை மறந்து
மனிதர்களைக் கொல்லுகின்றார் குண்டு வைத்து
மனநலத்தில் குறை கொண்ட மனிதராகி
தனி மனிதர் சில பேரின் மனத்துட் பேயால்
தடுமாறி நிற்கின்றதோ மதங்கள் எல்லாம்

0 மறுமொழிகள்: